சாப்ட்வேர் நிறுவன உரிமையாளர் நிலத்தை பாஜக கட்சியைச் சேர்ந்த மூன்று பேர் மோசடி செய்ததாக பரபரப்பு புகார்

தூத்துக்குடியை சேர்ந்த சாப்ட்வேர் நிறுவனம் நடத்தி வரும் உரிமையாளருக்கு சொந்தமான சுமார் 2 கோடி ரூபாய் மதிப்பிலான 30 சென்ட் இடத்தை போலி ஆவணங்கள் மூலம் தமிழக பாரதிய ஜனதா கட்சி மாநில துணை தலைவர் முன்னாள் எம்பி சசிகலா புஷ்பா மற்றும் பாஜக சத்தியசீலன், மாதவன் ஆகியோர் மோசடியாக தங்களது பெயருக்கு மாற்றி விற்பனை செய்து கொலை மிரட்டல் விடுப்பதாக சாப்ட்வேர் நிறுவன உரிமையாளர் தாமஸ் கிங்ஸ்டன் குற்றச்சாட்டு.
தூத்துக்குடி அருகே உள்ள தருவைகுளம் பகுதியைச் சேர்ந்தவர் தாமஸ் கிங்ஸ்டன் சென்னை மற்றும் ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் சொந்தமாக சாப்ட்வேர் நிறுவனம் நடத்தி வருகிறார்.
இவருக்கு சொந்தமான 30 சென்ட் இடம் தூத்துக்குடி அருகே உள்ள மாநகராட்சிக்கு உட்பட்ட ஸ்பிக் நகர் பகுதியில் உள்ளது. இந்த சொத்தின் மதிப்பு சுமார் 1 1/2 கோடி ரூபாய் முதல் இரண்டரை கோடி ரூபாய் வரை கூறப்படுகிறது
இதைத் தொடர்ந்து தனது தொழிலுக்கு பணம் தேவைப்பட்டதால் தனக்கு சொந்தமான இடத்தை விற்பனை செய்ய தாமஸ் கிங்ஸ்டன் முடிவு செய்துள்ளார். இதை தொடர்ந்து தனக்கு பழக்கமான தூத்துக்குடி மாவட்டம் உமரி காடு பகுதியைச் சேர்ந்த பாரதிய ஜனதா கட்சியை சேர்ந்த மாவட்ட பொதுச் செயலாளர் உமரி சத்தியசீலன் மற்றும் அவரது நண்பர் மாதவன் ஆகியோரை அணுகி உள்ளார்.
இதைத்தொடர்ந்து உமரி சத்தியசீலன் மற்றும் மாதவன் ஆகியோரிடம் ரூபாய் பத்து லட்சம் பெற்றுக் கொண்டு தாமஸ் கிங்ஸ்டன் தனது இடத்தை விற்பனை செய்து தருவதற்காக சத்தியசீலன் மற்றும் மாதவன் ஆகியோருக்கு பவர் எழுதிக் கொடுத்துள்ளார்
இந்நிலையில் பவர் எழுதிக் கொடுத்து 14 மாதங்களாக இடத்தை விற்பனை செய்யாமல் உமரி சத்தியசீலன் மற்றும் மாதவன் ஆகியோர் இழுத்தடித்து வந்துள்ளனர் இதை அடுத்து தாமஸ் கிங்ஸ்டன் தனது இடத்திற்கான ஆவணங்களை திருப்பித் தருமாறு உமரி சத்தியசீலனிடம் கேட்டுக் கொண்டுள்ளார்
ஆனால் உமரி சத்தியசீலன் மற்றும் மாதவன் ஆகியோர் போலி ஆவணங்கள் தயாரித்தும், வாழ்நாள் உறுதிச் சான்றை போலியாக தயார் செய்தும், தாமஸ் கிங்ஸ்டன் வங்கி கணக்கில் ரூபாய் 80 லட்சம் வரவு வைத்ததாக வங்கி ஆவணங்களை போலியாக தயார் செய்து தமிழ்நாடு பாரதிய ஜனதா கட்சி துணை தலைவரும் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினருமான சசிகலா புஷ்பா பெயருக்கு கடந்த 40 நாட்களுக்கு முன்பு பத்திரப்பதிவு செய்துள்ளனர்.
இந்த மோசடி பத்திரப்பதிவு விஷயம் தாமஸ் கிங்ஸ்டனுக்கு தெரிய வந்ததை தொடர்ந்து உமரி சத்தியசீலன், மாதவன் மற்றும் சசிகலா புஷ்பா ஆகியோரை அணுகி தனது இடத்தை மோசடியாக பத்திரப்பதிவு செய்து விட்டீர்கள் ஆனால் அதற்கு உரிய பணத்தை தர கோரியுள்ளார் ஆனால் அதற்கு மோசடியில் ஈடுபட்ட சத்தியசீலன் சசிகலா புஷ்பா உள்ளிட்டோர் நாங்கள் மத்திய பாரதிய ஜனதா கட்சியை சேர்ந்தவர்கள் எங்களை ஒன்றும் செய்ய முடியாது பத்திர பதிவு ஆனது தான் அதை ரத்து செய்ய உன்னால் முடியாது என கூறியதுடன் உனக்கு பணத்தை தர முடியாது எனக்கூறி மிரட்டலும் விடுத்ததாக கூறப்படுகிறது
இதைத்தொடர்ந்து பாதிக்கப்பட்ட தாமஸ் கிங்ஸ்டன் பத்திரப்பதிவு சார்பதிவாளர், தூத்துக்குடி மாவட்ட நில அபகரிப்பு பிரிவு காவல் துறை உள்ளிட்ட அமைப்புகளுக்கு மோசடி பத்திரப்பதிவு ரத்து செய்து அவர்களை கைது செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என புகார் அளித்துள்ளார்.
மோசடியாக தனது நிலத்தை அபகரித்து தன்னை மிரட்டி வரும் பாரதிய ஜனதா கட்சி முக்கிய நிர்வாகிகளான சசிகலா புஷ்பா, உமரி சத்தியசீலன், மாதவன் ஆகியோரிடம் இருந்து தன்னை பாதுகாத்தும் தனது இடம் மற்றும் பணத்தை மீட்டுத் தருமாறு பாதிக்கப்பட்ட தாமஸ் கிங்ஸ்டன் கோரிக்கை விடுத்துள்ளார்.