சுதந்திர தின விழாவை முன்னிட்டு மாபெரும் இலவச மருத்துவ முகாம்

மயிலாடுதுறை மாவட்டம் தேரிழந்தூர் இஷா அத்துல் இஸ்லாம் சங்கம் மற்றும் ஜமாத்தார்கள் இணைந்து நடத்தும் சுதந்திர தின விழாவை முன்னிட்டு மாபெரும் இலவச மருத்துவ முகாம் நடைபெற்றது. இதில் ஜாமிஆ மஸ்ஜித் நாட்டாண்மை பஞ்சாயத்தார்கள் தலைமையில் முகாமை துவக்கி வைத்தனர்.மருத்துவர்கள் அருண்பிரகாஷ் பொது மருத்துவம் மற்றும் அறுவை சிகிச்சை நிபுணர் அரசு மருத்துவக் கல்லூரி திருவாரூர்.மற்றும் ஆர்த்தி பெண்கள் மற்றும் பொது மருத்துவ நிபுணர்.மஞ்சுகேஸ்வரி குழந்தைகள் நல சிறப்பு மருத்துவர்.என முகாமில் கலந்து கொண்டனர் பொதுமக்களுக்கு சர்க்கரை நோய் ரத்த அழுத்தம் தைராய்டு கோளாறுகள் வயிறு மற்றும் குடல் கோளாறுகள் புற்றுநோய் உமிழ்நீர் சுரப்பி கட்டிகள்.சிறு குழந்தைகள் உடல்நலம் குழந்தைகளுக்கான ஊட்டச்சத்து போன்ற அனைத்து விதமான நோய்களுக்கும் இலவசமாக பொதுமக்கள் ஏராளமானோர் வந்து ஆர்வத்துடன் மருத்துவரிடம் ஆலோசனை பெற்று தங்களது உடலை பரிசோதனை செய்து கொண்டு பயன்பெற்றனர்.