BREAKING NEWS

சுப்பன் கால்வாய் திட்டத்தை நிறைவேற்ற வலியுறுத்தி கவன ஈர்ப்பு மாநாடு.

சுப்பன் கால்வாய் திட்டத்தை நிறைவேற்ற  வலியுறுத்தி கவன ஈர்ப்பு மாநாடு.

சிவகங்கை மாவட்டம் மானாமதுரை நகராட்சி அலுவலகம் முன்பு விவசாயிகள் கவன ஈர்ப்பு மாநாடு நடைபெற்றுது.

 

வைகை ஆற்றின் முக்கிய துணை ஆறான உப்பாற்றில் வரும் தண்ணீரை பாசனத்திற்கு பயன்படுத்தும் வகையில் கடந்த 40 ஆண்டுகளாக கிடப்பில் போடப்பட்டுள்ள சுப்பன் கால்வாய்த்திட்டத்தை நீர்த்தேக்கத் திட்டமாக செயல்படுத்தி சிறப்பு நிதி ஒதுக்கீடு செய்து உடனே நிறைவேற்ற வலியுறுத்தி 26 கண்மாய்ப் பாசன விவசாயிகள் மானாமதுரை நகராட்சி அலுவலகம் கவன ஈர்ப்பு மாநாடு நடைபெற்றது.

 

 

இந்த மாநாட்டில் எம்.அர்ச்சுனன் மாநில பொது செயலாளர் இராம.முருகன் மாநிலச் செயலாளர், மற்றும் காவிரி- வைகை கிருதுமால் குண்டாறு பாசன விவசாயிகள் கூட்டமைப்பு விவசாயிகள் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.

 

CATEGORIES
TAGS

COMMENTS

Wordpress (0)
Disqus (0 )