செங்கம் அரசு பள்ளியில் நுழைந்த நல்ல பாம்பு தீயணைப்பு துறையினர் லாபகமாக பிடித்து வனதுறையினரிடம் ஒப்படைப்பு.

திருவண்ணாமலை மாவட்டம் செங்கம் அரசினர் ஆண்கள் மேல்நிலை பள்ளியில் தேர்வு எழுதும் மாணவர்களுக்கு சிறப்பு வகுப்பு நடைபெற்று வரும் நிலையில் சுமார் 5 அடி நீலமுள்ள நல்ல பாம்பு படிகட்டு பகுதிக்குள் நுழைவதை கண்ட மாணவர்கள் சென்று ஆசிரியர்களிடம் கூறியதை அடுத்து,
உடனடியாக ஆசிரியர்கள் செங்கம் தீயணைப்பு துறையினருக்கு தகவல் கொடுத்தனர் விரைந்து வந்த செங்கம் தீயணைப்பு துறையினர் படி கட்டு அடியில் ஆக்ரோஷமாக இருந்த நல்ல பாம்பை லாபகமாக பிடித்து செங்கம் வனத்துறையினரிடம் ஒப்படைத்தனர்.
பின்னர் நல்ல பாம்பை வனத்துறையினர் அருகில் உள்ள வனப்பகுதியில் பத்திரமாக விட்டனர். அரசுப் பள்ளியில் திடீரென பாம்பு புகுந்ததால் சிறிது நேரம் மாணவர்கள் இடையே பதற்றம் நிறுவியது
CATEGORIES திருவண்ணாமலை
TAGS கல்விசெங்கம் அரசினர் ஆண்கள் மேல்நிலை பள்ளிதமிழ்நாடுதலைப்பு செய்திகள்திருவண்ணாமலை செங்கம்திருவண்ணாமலை மாவட்டம்பள்ளியில் 5 அடி நீலமுள்ள பாம்புமுக்கிய செய்திகள்