செங்கல்பட்டில் வழங்கப்பட்ட வாக்களர் பட்டியல் குறித்து அரசியல் கட்சியினரோடு ஆலோசனை.

செய்தியாளர் செங்கை ஷங்கர்.
தேர்தல் கண்காணிப்பாளர் ஆட்சியர் பங்கேற்பு…
செங்கல்பட்டு மாவட்டத்திற்கு உட்பட்ட தாம்பரம் பல்லாவரம், சோழிங்கநல்லூர், திருப்போரூர், செய்யூர், மதுராந்தகம், செங்கல்பட்டு உள்ளிட்ட ஏழு தொகுதிகளுக்கான வாக்காளர் வரைவு பட்டியல் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் வாயிலாக அரசியல் கட்சி நிர்வாகிகளிடம் ஏற்கனவே வெளியிடப்பட்டிருந்தது.
அது குறித்து வரைவு பட்டியலில் ஏதேனும் குறைகள் இருக்கிறதா என அரசியல் கட்சியினர் மற்றும் தேர்தல் தேர்தல் அலுவலர்கள் மத்தியில் தேர்தல் கண்காணிப்பாளர் மற்றும் தொழிலாளர் நலத்துறை முதன்மை செயலாளர் அதுல் ஆனந்த் முன்னிலையில் அனைத்து அரசியல் கட்சியினரோடு ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.
அப்போது அரசியல் கட்சியினர் பூத் வாரியாக வரையறுக்கப்பட்டுள்ள வாக்காளர் பட்டியலில் நிறைய குளறு படிகள் இருப்பதாகவும் அதனால் மக்களிடம் பூத் லிஸ்ட் வழங்க அரசியல் வாதிகளுக்கும் அரசு அலுவலர்களுக்கும் மிகவும் சிரமமாக இருப்பதாக தங்கள் கருத்துக்களை தெரிவித்தனர்.
இந்நிகழ்ச்சியில் மாவட்ட வருவாய் அலுவலர் மேன்வல்ராஜ், தேர்தல் வட்டாட்சியர், மற்றும் துறைரீதியான அலுவலர்கள் மற்றும் திமுக பாஜக, காங்கிரஸ் மற்றும் கம்யூனிஸ்ட் கட்சி நிர்வாகிகள் என பலர் கலந்து கொண்டனர்.