BREAKING NEWS

சேலம், வாழப்பாடியில் தமிழ்நாடு ஊராட்சி செயலாளர்கள் சங்கத்தின் மாநிலத் தலைவர் ஜான்போஸ்கோ பிரகாஷ் பேட்டி.

சேலம், வாழப்பாடியில் தமிழ்நாடு ஊராட்சி செயலாளர்கள் சங்கத்தின் மாநிலத் தலைவர் ஜான்போஸ்கோ பிரகாஷ் பேட்டி.

சேலம் மாவட்டம், வாழப்பாடியில் தமிழ்நாடு ஊராட்சி செயலாளர்கள் சங்கத்தின் மாநிலத் தலைவர் ஜான்போஸ்கோ பிரகாஷ் செய்தியாளர்களுக்க பேட்டி அளித்தார்.

                    

தமிழகம் முழுவதும் 8500 ஊராட்சி செயலாளர்கள், 3 அம்ச கோரிக்கையை வலியுறுத்தி இன்று முதல் 3 நாட்களுக்கு ஊதியமில்லா விடுப்பு எடுத்து போராட்டம் நடத்தி வருகின்றனர்.

இந்த போரத்திட்டத்தினால் தமிழகம் முழுவதும் ஊராட்சி பணிகள் பாதிக்கும் நிலை ஏற்பட்டுள்ளது. 

 

  “மேலும் தமிழக அரசு ஊராட்சி செயலர்களின் கோரிக்கையை நிறைவேற்றாவிட்டால் அக்டோபர் 3 முதல் சென்னையில் சாகும் வரை உண்ணாவிரத போராட்டம் நடத்த வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளதாக தமிழ்நாடு ஊராட்சி செயலாளர்கள் சங்க மாநிலத் தலைவர் தலைவர் ஜான்போஸ்கோ பிரகாஷ் செய்தியாளர்களிடம் தெரிவித்தார். 

 

சேலம் மாவட்டம் வாழப்பாடியில் செய்தியாளர்களை சந்தித்த தமிழ்நாடு ஊராட்சி செயலாளர்கள் சங்க மாநிலத் தலைவர் ஜான் போஸ்கோ பிரகாஷ் தெரிவித்ததாவது, 

 

ஊரக வளர்ச்சித் துறையில் பணிபுரிகின்ற கிராம ஊராட்சி செயலாளர்கள், பல்வேறு திட்டப் பணிகளை ஒரே நேரத்தில் செயல்படுத்த அழுத்தம் தருவதால், வேலைப்பளு மற்றும் மன அழுத்தத்தால் பாதிக்கப்படுகின்றனர்.

 

இதனால் பலர் தற்கொலை முயற்சியில் ஈடுபட்டு வருகின்றனர். எனவே, சீரான பணியை வழங்க வேண்டும்.தமிழகம் முழுவதும் காலியாக உள்ள ஊராட்சி செயலர் பணியிடங்களை, தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையத்தின் மூலமாக நிரப்ப வேண்டும். 

 

ஊராட்சி செயலாளர்களுக்கு, ஊராட்சி மன்றதலைவர்கள் மூலம் ஊதியம் வழங்குவதில் பல்வேறு இடர்பாடுகள் ஏற்படுகிறது. ஊதியத்தை கருவூலம் மூலம் வழங்கிட வேண்டும். ஓய்வூதியத்தை உயர்த்திட வேண்டும். 

 

இந்த முக்கிய 3 கோரிக்கைகளை நிறைவேற்ற வலியுறுத்தி திங்கட்கிழமை முதல் 3 நாள் ஊதியமில்லா விடுப்பு எடுத்து போராட்டம் நடத்தி வருகிறோம். தமிழக அரசும், முதல்வர் மு.க.ஸ்டாலினும், எங்களின் கோரிக்கையை கனிவுடன் பரிசீலித்து நிறைவேற்றி தர வேண்டும்.

 

கோரிக்கை நிறைவேறாத நிலையில், அடுத்தகட்டமாக, அக்டோபர் 3 முதல் சென்னையில் சாகும் வரை உண்ணாவிரத போராட்டம் நடத்த வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது என்றார்.இவ்விழாவிற்கான ஏற்பாடுகளை,

 

பேளூர் பேரூராட்சி முன்னாள் தலைவர் எல்ஐசி ராஜேந்திரன், வேணுகோபால், பெத்தநாயக்கன்பாளையம் மத்திய ஒன்றிய திமுக செயலாளர் வி.எஸ்.மூர்த்தி,  ஆர்.எஸ்.மாதையன், மிலிட்டரி ராஜேந்திரன்,. ராமமூர்த்தி ஆகியோர் கொண்ட குழுவினர் செய்திருந்தனர்.

CATEGORIES
TAGS

COMMENTS

Wordpress (0)
Disqus (0 )