BREAKING NEWS

சோளிங்கர் காந்தி ரோட்டில் ₹7 லட்சத்தில் தார்சாலை அமைக்கும் பணி நகராட்சி தலைவர் ஆய்வு..

சோளிங்கர் காந்தி ரோட்டில் ₹7 லட்சத்தில் தார்சாலை அமைக்கும் பணி நகராட்சி தலைவர் ஆய்வு..

108 திவ்ய தேசங்களில் ஒன்றான சோளிங்கர் அருள்மிகு லட்சுமி நரசிம்ம ஸ்வாமி திருக்கோவிலில் சித்திரை பிரம்மோற்சவத்தை முன்னிட்டு சுவாமி வீதியுலா நடைபெறும்.

 

காந்தி ரோட்டில் சேதமடைந்திருந்த சாலையை சீரமைத்து நகராட்சி பொது நிதி ₹7லட்சம் மதிப்பீட்டில் தார்சாலை அமைக்கும் பணி நேற்று நடைப்பெற்றது.

தார்சாலை அமைக்கும் பணிகளை நகராட்சி தலைவர் தமிழ்ச்செல்வி பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார். அப்போது தார்சாலை தரமாகவும் ,உறுதியாகவும் இருக்க வேண்டும் என ஒப்பந்ததாரரிடம் தெரிவித்தார். நகராட்சி கவுன்சிலர்கள் அசோகன், கோபால், மோகனா சண்முகம் ஆகியோர் உடனிருந்தனர்.

Share this…

CATEGORIES
TAGS