BREAKING NEWS

ஜெயங்கொண்டம் – மின்சார கட்டண உயர்வை திரும்ப பெற வலியுறுத்தி தமிழ்நாடு வெல்டிங் உரிமையாளர் சங்க கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

ஜெயங்கொண்டம் – மின்சார கட்டண உயர்வை திரும்ப பெற வலியுறுத்தி தமிழ்நாடு வெல்டிங் உரிமையாளர் சங்க கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

அரியலூர் மாவட்ட தமிழ்நாடு வெல்டிங் உரிமையாளர் முன்னேற்ற சங்கத்தின் முப்பெரும் விழா ஜெயங்கொண்டம் தனியார் கூட்டரங்கில் நடைபெற்றது. கூட்டத்தில் மாநிலத் தலைவர் வெங்கடேசன் சங்க செயல்பாடு மற்றும் வளர்ச்சி குறித்து சிறப்புரையாற்றினார்.

 

கூட்டத்தில் மின் கட்டணம் உயர்வை கட்டுப்படுத்த வேண்டும், இரும்பு விலையை குறைக்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் தீர்மானமாக நிறைவேற்றப்பட்டது. கூட்டத்தில் ஜெயங்கொண்டம் தா.பழூர், ஆண்டிமடம், உடையார்பாளையம், மீன்சுருட்டி உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் இருந்து 300-க்கும் மேற்பட்ட வெல்டிங் பட்டறை உரிமையாளர்கள் கலந்து கொண்டனர்.

Share this…

CATEGORIES
TAGS