தஞ்சாவூரில் கிறிஸ்துமஸ் தாத்தா வேடம் அணிந்து போலீசாருடன் இணைந்து மாஸ்க் வழங்கிய பள்ளி மாணவர்கள்.

தஞ்சை,
கொரோனா தொற்று மீண்டும் துவங்க உள்ள நிலையில் பொதுமக்கள் மாஸ்க் கட்டாயம் அணிய வேண்டும் என மத்திய மாநில அரசுகள் அறிவுறுத்தியுள்ளன.
அதன்படி பொதுமக்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையிலும் கொரோனா தொற்றை தடுக்கும் வகையிலும் பள்ளி மாணவர்கள் நாசிக்கா, சிவனாசிக்வரன் ஆகியோர் கிறிஸ்துமஸ் தாத்தா வேடமணிந்து,..
தஞ்சை மேற்கு காவல் நிலைய இன்ஸ்பெக்டர் சந்திரா உள்ளிட்ட போலீசாருடன் இணைந்து தஞ்சை பழைய பேருந்து நிலையம் அருகில் மாஸ்க் அணியாமல் வரும் பொதுமக்களுக்கு மாஸ்க் வழங்கி விழிப்புணர்வை ஏற்படுத்தி கிறிஸ்துமஸ் வாழ்த்துக்களை தெரிவித்து சாக்லேட் வழங்கினர்.
CATEGORIES தஞ்சாவூர்
TAGS கிறிஸ்துமஸ் தாத்தா வேடமணிந்து கொரோனா விழிப்புணர்வுதஞ்சாவூர் மாவட்டம்தமிழ்நாடுதலைப்பு செய்திகள்முக்கிய செய்திகள்