BREAKING NEWS

தஞ்சாவூரில் தன்னார்வ தொண்டு நிறுவனம் மூலம் நலத்திட்ட உதவி.

தஞ்சாவூரில் தன்னார்வ தொண்டு நிறுவனம் மூலம் நலத்திட்ட உதவி.

தஞ்சாவூர் ஜோதி அறக்கட்டளை சார்பில் பல்வேறு நலத்திட்ட உதவிகள் மற்றும் பள்ளி கல்லூரிகளில் பயிலும் மாணவர்களுக்கு கல்வி உதவித் தொகையும் வழங்கி வருகிறது மேலும் தஞ்சை மாவட்ட காவல்துறையுடன் இணைந்து பல்வேறு விழிப்புணர்வு நடவடிக்கைகளையும் மேற்கொண்டு வருகிறது.

 

அதைப்போல் தஞ்சாவூரில் ஆதரவற்றோர், விழிம்பு நிலை மக்கள், செவித்திறன் பாதிப்புடையோர், தூய்மை பணியாளர்கள் உள்ளிட்டவர்களுக்கு புத்தாண்டு மற்றும் பொங்கல் பண்டிகையை கொண்டாடும் வகையில் ஒரு மாதத்திற்கு வீட்டிற்கு தேவையான மளிகை பொருட்களை அறக்கட்டளை செயலாளர் பிரபு ராஜ்குமார் வழங்கினார்.

 

இதில் அலுவலக மேலாளர் ஞானசுந்தரி, கள ஒருங்கிணைப்பாளர் நாராயண வடிவு ஆகியோர் கலந்து கொண்டனர்.

Share this…

CATEGORIES
TAGS