தஞ்சாவூர் பெரிய கோவில் விளக்குகளால் ஓளிர்ந்தது.

ஜி 20 நாடுகள் தலைமை பொறுப்பை இந்தியா ஏற்றதை கொண்டாடும் விதமாக, தஞ்சாவூர் பெரிய கோவில் விளக்குகளால் ஓளிர்ந்தது.
அர்ஜென்டினா கனடா சீனா இந்தியா பிரேசில் அமெரிக்கா இங்கிலாந்து உள்ளிட்ட 20 நாடுகள் உள்ளடக்கிய ஜி 20 அமைப்பிற்கு இன்று முதல் இந்தியா தலைமை பொறுப்பேற்றுள்ளது. இன்று முதல் ஓராண்டுக்கு இந்தியா தலைமை ஏற்கும்.
இதனை கொண்டாடும் விதமாக நாடு முழுவதும் உள்ள தஞ்சை பெரிய கோவில் உள்ளிட்ட 100 பாரம்பரிய சின்னங்கள் ஜி-20 அடையாள சின்னத்துடன் நாட்டின் வளர்ச்சியை குறிக்கும் விதமாக தாமரை சின்னத்துடன் ஜொலிக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
இதனை அடுத்து தஞ்சை பெரிய கோவில் கோட்டை சுவறில் ஜி 20 மாநாடு சின்னத்தை ப்ரொஜெக்டர் மூலம் பிரதிபலிப்பதுடன் . தஞ்சை பெரிய கோவில் சுற்றுச்சுவர் வெள்ளி நிறங்களில் ஜொலிக்க விடப்பட்டுள்ளது. இந்த விளக்கு இன்று முதல் 7 நாட்களுக்கு ஏறிய விடப்படும்.