தஞ்சாவூர் மாவட்டத்தில் 1,183 கடைகளில் உள்ள 7.5 லட்சம் கார்டுகளுக்கு பொங்கல் பரிசு தொகுப்பு பொருள்களுக்கான டோக்கன்.

தஞ்சாவூர் மாவட்டத்தில்,
பொங்கல் பரிசு தொகுப்பாக வீடுகள் தோறும் டோக்கன்கள் விநியோகம் செய்ய தமிழக அரசு உத்தரவிட்டது.
இதை தொடர்ந்து தஞ்சை மாவட்டத்தில் மொத்தம் 1,183 கடைகளில் உள்ள 7 லட்சத்தி 505 ரேஷன் குடும்ப அட்டைதாரர்களுக்கு டோக்கன் வழங்கும் பணிகளில் ரேஷன் கடை ஊழியர்கள் மேற்கொண்டு வருகின்றனர்.
ஒரே நேரத்தில் பொதுமக்கள் ரேஷன் கடையில் கூட்டமாக கூடுவதை தடுக்கும் பொருட்டு வீடு வீடாகச் சென்று டோக்கன் கொடுக்கும் பணிகள் நடந்து வருகிறது. இதைப்போல் தஞ்சாவூர் கந்தையில் செயல்படும் கடை எண் 004க்கு உட்பட்ட பகுதிகளான சுங்காதிடல், சருக்கை, கரந்தை உள்ளிட்ட பகுதிகளில் இன்று டோக்கன் வினியோகம் செய்யப்பட்டு வருகிறது.
ஒரு நாளைக்கு 300 கார்டுகள் என வழங்கப்படுவதாகவும், 9ஆம் தேதி முதல் பொருட்கள் வழங்கப்படும் என தெரிவித்துள்ளனர். மேலும் கரும்பு புதிதாக கொடுப்பதற்காக எட்டாம் தேதி கொள்முதல் செய்யப்பட்டு ஒன்பதாம் தேதி முதல் கரும்பும் கொடுக்கப்படும்.
டோக்கன் வாங்காத பொதுமக்கள் டோக்கன் இல்லாமல் கடைகளில் வந்0து பொருட்கள் வாங்கிக் கொள்ளலாம் எனவும் தெரிவித்துள்ளனர்.