தஞ்சை மாநகராட்சி மாமன்ற கூட்டத்தில் ஆற்றுப்பாலம் உள்ளிட்ட 9 ரவுண்டானாக்கள் சிறப்பாக பராமரித்து அழகுப்படுத்தப்படும் என் மேயர் ராமநாதன் தகவல்.

தஞ்சை மாநகராட்சியில் மாமன்ற கூட்டம் நடைபெற்றது. இதற்கு மேயர் சண் ராமநாதன் தலைமை தாங்கினார். ஆணையர் சரவணகுமார், துணை மேயர் அஞ்சுகம் பூபதி ஆகியோர் முன்னிலை வகித்தனர். இந்தக் கூட்டத்தில் வார்டு கவுன்சிலர்கள், மாநகராட்சி பணியாளர்கள் கலந்து கொண்டனர்.

கூட்டத்தில் முன்னதாக இன்றுடன் பணி நிறைவு பெறும் மாநகராட்சி மேலாளர் கிளமெண்ட் அந்தோணிராஜ்க்கு அனைவரும் பாராட்டி வாழ்த்து தெரிவித்தனர்.
இந்த கூட்டத்தில் வார்டு கவுன்சிலர்கள் தங்களது வார்டு கோரிக்கைகள் குறித்து பேசினர்.

உறுப்பினர்களின் கோரிக்கைகள் பரிசீலித்து உரிய நடவடிக்கை எடுக்கப்படும். தஞ்சை மாநகராட்சி எல்லைக்கு உட்பட்ட ஆற்றுபாலம், ராஜராஜன்சோழன் சிலை, சி.ஆர்.சி.டெப்போ, மேம்பாலம் இறக்கம், ராமநாதன் மருத்துவமனை, பழைய வீட்டு வசதி வாரியம், குழந்தை இயேசு கோவில், தொல்காப்பியர் சதுக்கம், வெள்ளைப் பிள்ளையார் கோவில் ஆகிய ரவுண்டானாக்கள் சிறப்பாக பராமரித்து அழகுப்படுத்தப்படும் என்ன உன் தெரிவித்தார்.
