தஞ்சையில் அளவுக்கு அதிகமாக 50 க்கும் மேற்பட்ட பெண்களை ஏற்றிக் கொண்டு அதி வேகமாக கொட்டும் மழையில் ஆபத்தான முறையில் சாலையில் சென்ற சிறிய சரக்கு லாரி.

சரக்கு வாகனத்தில் மனிதர்களை ஏற்றி செல்லக்கூடாது என்கிற விதிகளுக்கு மாறாக தஞ்சையில் அளவுக்கு அதிகமாக 50 க்கும் மேற்பட்ட பெண்களை ஏற்றிக் கொண்டு,
அதி வேகமாக கொட்டும் மழையில் ஆபத்தான முறையில் சாலையில் சென்ற சிறிய சரக்கு லாரியின் வீடியோ இணைய தலங்களில் வைரலாகி வருகிறது.

தஞ்சை திருவையாறு இடையிலான சாலையில் கொட்டும் மழையில் சிறிய சரக்கு லாரி ஒன்று அளவுக்கு அதிகமாக பாரம் தாங்க முடியாத அளவிற்கு 50க்கும் மேற்பட்ட பெண்களை ஏற்றிக்கொண்டு அதி வேகத்தில் சென்றது பிடிமானம் இல்லாமல் ஒருவரை.

ஒருவரை நெருக்கி கொண்டு ஆபத்தான முறையில் உட்கார்ந்து கொண்டு சென்றனர். பாரம் தாங்காமல் சிறிய சரக்கு லாரி கவிழ்ந்து விழும் அளவிற்கு சென்ற வீடியோ இணைய தலங்களில் வைரலாகி வருகிறது.
CATEGORIES தஞ்சாவூர்
