தனியாருக்கு சொந்தமான இடத்தில் பல ஆண்டுகளாக இருந்த கோவிலை நில உரிமையாளர் இடிக்க முயன்றதால் பொதுமக்கள் தடுத்து நிறுத்திய சம்பவம் பொள்ளாச்ச்சி பரபரப்பு ஏற்பட்டது.

கோயம்புத்தூர் மாவட்டம்: பொள்ளாச்சி அண்ணா நகரில் பல வருடங்களாக அப்பகுதி மக்கள் வணங்கிவந்த கோவிலை திடீரென வந்த நில உரிமையாளர் என கூறி கோவிலின் மேற்கூரையை பிரித்து இது வீட்டுமனைக்கு சொந்தமான இடம் வீடு கட்டுவதற்கு வழிதடம் இல்லை ஆகவே இந்த கோவிலை இடிக்க வந்துள்ளோம் என கூறி இடிக்க முற்பட்டபோது தகவல் அறிந்து வந்தபொதுமக்கள் அவரிடம் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர்.
உடன்பாடு ஏற்றபடவில்லை கோபம்கொண்ட அப்பகுதி பொதுமக்கள் ஒன்றிணைந்து கோவிலை இடிக்க விடமாட்டோம் 60ஆண்டுகளாக நாங்கள் வணங்கும் தெயவம் இதை இடிக்க நாங்கள் விடமாட்டோம் என போராட்டத்தில் ஈடுபட்டனர் காவல்துறைக்கு தகவல்
கொடுக்கபட்டது.
கோவில் காவல்துறை பாதுகாப்பின் கீழ் கொண்டுவரபட்டது இச்சம்பவம் பொள்ளாச்சியில் பெரும் பரபரப்பு ஏற்படுத்தியது.
CATEGORIES கோயம்புத்தூர்
TAGS குற்றம்கோயம்புத்தூர் மாவட்டம்கோவிலை நில உரிமையாளர் இடிக்க முயன்றதால் பொதுமக்கள் தடுத்து நிறுத்திய சம்பவம்தமிழ்நாடுதலைப்பு செய்திகள்பொள்ளாச்சிமுக்கிய செய்திகள்