BREAKING NEWS

தமிழ் மொழியை வளர்க்க ஜப்பான் நாட்டில் இருந்து இங்கு வந்து ஆர்வமாக தமிழ் பயின்று வருகின்றனர் என்று தருமபுர ஆதீனம் பேட்டி.

தமிழ் மொழியை வளர்க்க ஜப்பான் நாட்டில் இருந்து இங்கு வந்து ஆர்வமாக தமிழ் பயின்று வருகின்றனர் என்று தருமபுர ஆதீனம் பேட்டி.

 

தஞ்சாவூரில் ஜப்பான் சிவ ஆதீனம் சார்பில் திருக்கயிலாய பரம்பரை திரு தருமையாதீனம் 27-வது சந்நிதானம் ஸ்ரீலஸ்ரீ கயிலை மாசிலாமணி தேசிக ஞான சம்பந்த பரமாச்சாரிய சுவாமிகளுக்கு பாராட்டு விழா தஞ்சையில் நடைபெற்றது.

 

 

செந்தில் முருகன் தலைமையில் நடைபெற்ற இவ்விழாவில் ஜப்பான் நாட்டைச் சேர்ந்த பாலகும்பா குருமணி என்கிற தகாயூகி ஹோஷி,குரு மகா சந்நிதான சுவாமிகளை பாராட்டி பேசினார், பின்னர் தருமபுரம் ஆதீனம் சுவாமிகள் ஆசியுரை வழங்கினார்.

 

 

முன்னதாக மங்கள இசை,பரதநாட்டியம், வீணை இசை உள்ளிட்ட இன்னிசை கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றன, இந் நிகழ்ச்சியில் பங்கேற்ற ஜப்பான் நாட்டைச் சேர்ந்த ஆண்கள், பெண்கள் அனைவரும் தமிழ்நாட்டின் கலாச்சாரத்தை பறைசாற்றும் வகையில் வேஷ்டி, சட்டை, புடவை அணிந்து வந்து அனைவரையும் கவர்ந்தனர்,

 

 

பின்னர் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த தருமபுரம் ஆதினம் கூறும்போது, ஜப்பான் நாட்டில் பழமையான 1572 ஆம் ஆண்டில் மிகப்பெரிய சிவலிங்கம் அங்கு கண்டெடுக்கப்பட்டுள்ளது, சைவ நெறி உலகமெல்லாம் ஓங்குவதற்கு ஒப்ப அந்த நாட்டிலேயும் சைவ நெறி வளர்ந்திருக்கிறது.

 

 

முகநூல் வழியாக குடமுழுக்கு திருவிழாக்களை தெரிந்து கொண்டு அந்த நாட்டில் முருகன் கோவில் கட்டுகிறார்கள், அங்கே சைவத் திருக்கோவில் செய்ய இருக்கிறார்கள், தமிழகத்தில் வைத்தீஸ்வரன் கோவிலில் வழிபாடு செய்துள்ளனர், அவர்களின் நோக்கம் சைவம் உலகம் முழுவதும் பரப்ப வேண்டும், அதோடு தமிழ் மொழியும் ஜப்பான் மொழியும் வழிபாட்டு முறையில் ஒத்துப் போகிறது என்பதை அவர்கள் உணர்ந்து கொண்டு தலங்களை வழிபாடு செய்ய வேண்டும் என்ற நோக்கத்தில் வந்துள்ளனர் என்று தெரிவித்தார்.

 

 

மேலும் பள்ளிக்கூடங்களில் தமிழ் மொழியை வளர்க்க வேண்டும், வீடுகளிலும் தமிழைப் பற்றி பேச வேண்டும், ஜப்பான் நாட்டில் இருந்து இங்கு வந்து விருப்பமாக தமிழ் படிக்கிறார்கள்,

 

 

நமது நாட்டில் உள்ளவர்கள் தமிழ் படிப்பதை குறைவாக கருதுகிறார்கள், பெற்றோர்கள் தமிழ் படித்தால் அரசு வேலை கிடைக்கும் என்கிற நிலையை அறிவித்தால் எல்லோரும் தமிழ் படிப்பார்கள் என்றும் அன்னையும் பிதாவும் முன்னறி தெய்வம் அன்னை என்பது தாய்மொழி, பிதா என்பது வடமொழி(சமஸ்கிருதம்) இந்த இரண்டும் இறைவனுக்கு உகந்த மொழி என்று தெரிவித்தார்.

 

 

இந்நிகழ்ச்சியில் ஜப்பான் நாட்டைச் சேர்ந்த இறையன்பர்கள் தமிழகத்தைச் சார்ந்த இறையன்பர்கள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

 

CATEGORIES
TAGS