தமிழ்நாடு அரசு ரேஷன் கடை பணியாளர்கள் சங்க மாவட்ட கூட்டம் நேற்று தஞ்சையில் மாவட்டத் தலைவர் ராஜா தலைமையில் நடைபெற்றது.

இந்த கூட்டத்திற்கு பட்டுக்கோட்டை வட்ட தலைவர் ராமமூர்த்தி தஞ்சாவூர் சிவகுரு ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
இந்த கூட்டத்தில் மாநிலத் தலைவர் ராஜேந்திரன் மாநில பொதுச் செயலாளர் தினேஷ் குமார் ஆகியோருக்கு சிறப்புரை ஆற்றினார்.
இதில் பனி பரவல் ஆயில் பணி வெளி மாவட்ட மாறுதல் போன்றவற்ற பணியாளர்களின் விருப்பத்திற்கு ஏற்ப மாறுதல் செய்த பின் புதிய பணியாளர்கள் தேர்வு செய்யப்பட வேண்டும்.
நியாய விலை கடை பணியாளர்கள் அவர்களது கல்வி தகுதி அடிப்படையில் நேரடியாக எழுத்தர் பதவி வழங்கிட வேண்டும். தொடர்ந்து இருபது ஆண்டுகளுக்கு மேலாக பணிபுரிந்து வரும் கட்டுனர்களுக்கு அவரது கல்வியை தகுதியை பாராமல் விற்பனையாளர் பதவி உயர்வு தர வேண்டும்.
நியாய விலை கடை பணியாளர்களுக்கும் பொதுநிலை திறன் வரம்புக்குள் கொண்டு வர வேண்டும். நியாய விலை கடை பணியாளர்களுக்கு அவரது குடும்ப அட்டைகளுக்கு வழங்கப்படும் உணவுப் பொருட்களை விலை இல்லாமல் மாந்தரும் வாங்க வேண்டும்.
நியாய விலை கடை பணியாளர்களுக்கு உள்ள தற்போதைய மருத்துவ காப்பீடு திட்டத்தை ரத்து செய்து அனைத்து விதமான நோய்களுக்கும் சிகிச்சை பெரும் வகையில் புதிய மருத்துவ காப்பீடு செய்து தர வேண்டும்.
நியாய விலை கடை பணியாளர்களுக்கு அரசாணை எண் 76 குறிப்பிட்டவாறு பரிந்துரைகள் ஆணை 17 18 19 20 ஆகிய நிதி தொடர்பு இல்லாதவைகளை உடனடியாக அமல்படுத்த வேண்டும்.
நியாய விலை கடை பெண் பணியாளர்களுக்கு மதப் பேர் விடுப்பு காலத்தை பணிக்காலமாக கருதி ஒரு வருட ஊதியம் வழங்கப்பட வேண்டும்.
நான் எவ்வளவு கடைகளுக்கு பாயிண்ட் ஆஃப் போஸ்ட் விற்பனை முனை கருவிகளை மாற்றி கொடுத்தும் 17 ஆண்டுகளாக பயன்படுத்தப்பட்டு வரும் எடை மேடை தராசு புதிதாக கொள்முதல் செய்து தர வேண்டும்.
பூதலூர் தாலுகாவில் பணிபுரியும் பணியாளர்களுக்கு மாதாந்திர ஊதியம் மற்றும் பண பயன்கள் கணினி பரிவர்த்தனை மூலமாக வழங்கப்பட வேண்டும். ஊதியத்தை நேரடியாக கையில் வழங்குவதை தவிர்க்கப்பட வேண்டும்.
குடோனில் இருந்து வரப்படும் கட்டுப்பாட்டு பொருள்கள் சரியான எடையுடன் சமசீர் செய்து நூல் மாற்றி அந்தந்த மாதத்திற்கு உடைய நூல் மாற்றி கடைக்குள் அனுப்பி வைக்க வேண்டும்.
புதிதாக தேர்ந்தெடுக்கப்படும் நியாய விலை கடை பணியாளர்களை தமிழ்நாடு தேர்வாணையம் மூலம் தேர்ந்தெடுக்கப்பட வேண்டும். இவ்வாறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
இறுதியில் மணிகண்டன் நன்றியுரை ஆற்றினார். கூட்டத்தில் தஞ்சை மாவட்ட பொறுப்பாளர்கள் நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.