தரங்கம்பாடி அடுத்து பொறையார் தமிழ் சுவிசேஷ லூர்தன் திருச்சபையில் குருத்தோலை பவனி ஊர்வலம் – ஏராளமான கிருஸ்தவர்கள் பங்கேற்பு

மயிலாடுதுறை மாவட்டம், தரங்கம்பாடி தாலுகா பொறையாரில் குருத்தோலை ஞாயிறு பவனி தமிழ் சுவிசேஷ லுத்தரன் திருச்சபையின் சார்பில் நடைபெற்றது இதில் ஏராளமான கிருஸ்தவர்கள் பங்கேற்றனர்.
பொறையாரில் உள்ள 278 ஆண்டுகள் பழமையான பெத்லேகம் ஆலய சபை குரு ஜான்சன் மான்சிங் தலைமையில் நடைபெற்ற குருத்தோலை ஞாயிறு பவனி ஊர்வலம் பொறையார் பழைய பேருந்து நிலையம் முன்பு தொடங்கி தரங்கம்பாடி பேரூராட்சி முக்கிய வீதிகள் வழியாக ஏராளமான கிறிஸ்தவர்கள் கைகளில் குருத்தோலைகளை கைகளில் ஏந்தியபடி ஓசன்னா பாடல் பாடி ம ஊர்வலமாக சென்று மீண்டும் தேவாலயத்தை வந்தடைந்தனர். அதனைத் தொடர்ந்து தேவாலயத்தில் சிறப்பு பிரார்த்தனை நடைபெற்றது.
இந்த நிகழ்வில் டி.பி.எம்.ஏ கல்லூரி முதல்வர் ஜான்சன் ஜெயக்குமார், சபைகுரு , பேராசிரியர் ஜோயல் எட்வின் ராஜ், சீகன்பால்க் அருங்காட்சியகம் இயக்குநர் சாமுவேல் மனுவேல், சபை பொருளாளர் பாஸ்கர், சம்பத், பேரூராட்சி வார்டு கவுன்சிலர் ஜோன்ஸ் எப் செல்லப்பா உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.