BREAKING NEWS

திமுக பிரதிநிதிகள் கூட்டம்: 50 ஆயிரம் புதிய உறுப்பினர்கள் சேர்க்க முடிவு!.

திமுக பிரதிநிதிகள் கூட்டம்: 50 ஆயிரம் புதிய உறுப்பினர்கள் சேர்க்க முடிவு!.

தூத்துக்குடி திமுக பிரதிநிதிகள் கூட்டத்தில் புதிதாக தொகுதிக்கு 50 ஆயிரம் உறுப்பினர்கள் சேர்ப்பது என தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

தூத்துக்குடி வடக்கு மாவட்ட திமுக பிரதிநிதிகள் கூட்டம் கலைஞர் அரங்கில் சமூக நலன் மற்றும் மகளிர் உரிமை துறை அமைச்சரும் வடக்கு மாவட்ட செயலாளருமான கீதாஜீவன் தலைமையில் நடைபெற்றது. இதில், வடக்கு மாவட்டத்துக்கு உட்பட்ட தூத்துக்குடி, விளாத்திகுளம்,

 

கோவில்பட்டி உள்ளிட்ட தொகுதிகளில் தொகுதிக்கு 50,000 புதிய உறுப்பினர் என்ற கணக்கின் படி ஒரு லட்சத்து 50 ஆயிரம் பேரை புதிதாக சேர்ப்பது எனவும், கலைஞரின் நூற்றாண்டு விழா பிறந்த நாளை வருடம் முழுவதும் நலத்திட்ட உதவிகள் வழங்கி கொண்டாடுவது எனவும், பாராளுமன்றத் தேர்தலை எதிர்கொள்ளும் வகையில் பூத் கமிட்டிகளை அமைப்பது உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

கூட்டத்தில் பேசிய அமைச்சர் கீதாஜீவன் “வீடு வீடாக சென்று புதிய உறுப்பினர்களை சேர்க்க வேண்டும் எனவும் மேலும் கிராமம் தோறும் முகாம்கள் போட்டும் புதிய உறுப்பினர்களை சேர்ப்பதற்கான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும்” என கேட்டுக்கொண்டார்.

 

இந்த நிகழ்ச்சியில் மாநகராட்சி மேயர் ஜெகன் பெரியசாமி விளாத்திகுளம் சட்டமன்ற உறுப்பினர் மார்கண்டையன், தூத்துக்குடி மாநகர செயலாளர் ஆனந்த சேகரன், வடக்கு மாவட்ட பார்வையாளராக நியமிக்கப்பட்ட திமுக தணிக்கை குழு உறுப்பினர் வேலுச்சாமி, நெசவாளர் அணி செயலாளர் பெருமாள்,  உட்பட பலர் கலந்து  கொண்டனர்.

 

CATEGORIES
TAGS