BREAKING NEWS

திருச்சி என்ஐடியில் அவசர உதவி அமைப்பின் சிறப்பு மையம் தொடக்க விழா நேற்று நடந்தது.

திருச்சி என்ஐடியில் அவசர உதவி அமைப்பின் சிறப்பு மையம் தொடக்க விழா நேற்று நடந்தது.

திருச்சி, என்ஐடி இயக்குனர் (பொ) ராம்கல்யாண் தலைமையில் நடந்த நிகழ்ச்சியில் போலீஸ் டிஜிபி சைலேந்திரபாபு மையத்தை தொடங்கி வைத்து பேசுகையில், திருச்சி என்ஐடி பல கிராமப்புற மாணவர்களின் கனவு கூடமாக இருந்து வருகிறது.

 

சிறந்த மதிப்பெண் பெற்று இங்கு படிக்கும் மாணவர்கள் சிறந்த நிறுவனத்தில் படிப்பதற்கு பெருமை கொள்ள வேண்டும். மாணவர்கள் கல்வி கற்பது ஊதியத்திற்கு மட்டுமின்றி சமுதாய மேம்பாட்டிற்கும் என்பதை புரிந்து கொள்ள வேண்டும்.

 

 

தொழில்நுட்ப வளர்ச்சி, சமுதாய மாற்றம் குறித்த புத்தகங்களை வாசிக்கும் பழக்கத்தை மாணவர்கள் ஏற்படுத்திக் கொள்ள வேண்டும். உலகம் உருண்டை என கூறிய கலிலியோ உள்ளிட்ட விஞ்ஞாணிகளுக்கு மரண தண்டனை வழங்கப்பட்டது.

 

ஆனால் தற்போது அவரின் கொள்கை அடிப்படையை ஏற்றுக் கொண்டு வானியியல் துறை செயல்படுகிறது. எதிர்காலத்தில் தொழில்நுட்ப வளர்ச்சி காரணமாக ஓட்டுனர் இல்லாமல் பஸ், ரயில், விமானம் ஓடும் நிலைமை ஏற்படும்.

 

சிசிடிவி கேமரா உள்ளிட்ட தொழில்நுட்ப வளர்ச்சி காரணமாக போலீஸ் இல்லாமல் சட்டம் ஒழுங்கை கட்டுப்படுத்தும் நிலை ஏற்படும். இதன் காரணமாக பல துறை சார்ந்தவர்கள் பணி இழக்கும் நிலைமை ஏற்படலாம். டாக்டர்கள் வியாதியை கண்டறிந்து சிகிச்சை நிலைமை மாறி லேப் தொழில்நுட்ப வல்லுனர்கள் நோயை கண்டறியும் நிலைமை ஏற்படும்.

 

 

மருத்துவ துறையில் ரோபோட் சிகிச்சை அளிக்கும் நிலைமை வந்து கொண்டுள்ளது. பல ஆண்டுகளுக்கு முன்பு சென்னையில் ஐஜி பணியில் இருந்து கொண்டு கேரளா, கர்நாடகா, ஆந்திரா, தமிழ்நாடு உள்ளிட்ட மாநிலங்களை கண்காணிக்கும் நிலைமை இருந்தது.

 

ஆனால் தற்போது போலீஸ் துறையில் ஏற்பட்டுள்ள மிகப்பெரிய தொழில்நுட்ப வளர்ச்சி காரணமாக எந்த இடத்தில் குற்றம் நடந்தாலும் அதனை கண்டறிந்து நடவடிக்கை எடுக்கும் நிலைமை ஏற்பட்டுள்ளது. தமிழக போலீஸ் துறை அறிவியல் பூர்வமான பல போட்டிகளில் வெற்றி பெற்று முத்திரை பதித்துள்ளது.

 

1498 போலீஸ் நிலையங்களில் ஒரு மில்லியன் புகார் பெறப்பட்டுள்ளது. தமிழகத்தில் உள்ள மகளிர் போலீஸ் ஸ்டேசன்களில் 75 ஆயிரம் புகார் பெறப்பட்டுள்ளது. ஒரு போலீஸ் செய்யும் பணியை அவரிடம் உள்ள ஸ்மார்ட் காலர் செயலி மூலம் முழுவதுமாக தெரிந்து கொள்ள முடியும்.

 

மற்ற எந்த துறையிடமும் இல்லாத மைக்ரோவேவ் கம்யூனிகேஷன் செயலி மூலம் போலீஸ் துறையில் பல்வேறு செயல்பாடுகள் நடக்கிறது. காவல் உதவி செயலி மூலம் பொதுமக்களுக்கு 66 வகையான உதவிகள் செய்யப்படுகிறது.

 

 

தொலைபேசி, செல்போன் மூலம் பணப்பட்டுவாடா செய்து ஏமாந்தவர்களுக்கு உதவுவதற்கு சைபர் கிரைம் செயல்படுகிறது. போலீஸ் நிலையங்களில் பேப்பரில் எழுதுவது நிறுத்தப்பட்டு இ ஆபீஸ் மூலம் அனைத்து தகவல்களும் பதிவு செய்யப்படுகிறது. தமிழக போலீஸ் துறை அபார வளர்ச்சி அடைந்துள்ளது என்றார்.

 

நிகழ்ச்சியில் போலீஸ் ஐஜி கார்த்திகேயன், கமிஷனர் சத்யபிரியா, எஸ்பி சுஜித்குமார், சி-டேக் பொது இயக்குனர் மகேஷ், திருவனந்தபுரம் சிடேக் இயக்குனர் கலைசெல்வன் உட்பட பலர் கலந்து கொண்டனர். முன்னதாக பேராசிரியர் சிவக்குமரன் வரவேற்றார். பேராசிரியர் சிஷாஜ் சைமன் நன்றி கூறினார்.

 

CATEGORIES
TAGS