BREAKING NEWS

திருச்சி, நவலூர் குட்டப்பட்டு : ஜல்லிக்கட்டு நிகழ்ச்சியில் 636 காளைகள், 128 வீரர்கள் பங்கேற்பு. 21 பேர் காயம்.

திருச்சி, நவலூர் குட்டப்பட்டு : ஜல்லிக்கட்டு நிகழ்ச்சியில் 636 காளைகள், 128 வீரர்கள் பங்கேற்பு. 21 பேர் காயம்.

திருச்சி மாவட்டம் நவலூர்குட்டப்பட்டு பகுதியில் ஜல்லிக்கட்டு நிகழ்வு நடைபெற்றது. இதில் 636 காளைகளும்,அவற்றை அடக்க 128 வீரர்களும் களம்கண்டதில் 21 பேர் காயமடைந்தனர்.

 

திருச்சி மாவட்டம் ராம்ஜிநகர் அருகே உள்ள நவலூர்குட்டப்பட்டு கிராமத்தில் ஜல்லிக்கட்டு நிகழ்ச்சி நடைபெற்றது. நிகழ்ச்சியை ஸ்ரீரங்கம் சட்டப்பேரவை உறுப்பினர் எம்.பழனியாண்டி, திமுக மணிகண்டம் ஒன்றிய செயலாளர் கருப்பையா, நவலூர்குட்டப்பட்டு ஊராட்சி தலைவர் ஜார்ஜ் பெர்னாண்டஸ் ஆகியோர் தொடங்கி வைத்தனர்.

 

விலங்குகள் நல வாரிய உறுப்பினர் மிட்டல் பார்வையாளராக கலந்து கொண்டு ஜல்லிக்கட்டை பார்வையிட்டார். முதலில் உள்ளூர் கோயில் காளைகள் அவிழ்த்து விடப்பட்டதையடுத்து, வெளியூர் காளைகள் களத்தில் இறக்கிவிடப்பட்டன.

 

சேலம், திண்டுக்கல், மதுரை, புதுக்கோட்டை , தஞ்சாவூர், திருச்சி மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து மொத்தம் 636 காளைகள் நிகழ்வில் பங்கேற்றன. அவைகளை அடக்கும் வகையில் 128 வீரர்கள் களத்தில் இறங்கினர்.

 

இதில் பிராட்டியூரை சேர்ந்த கார்த்திக் (23), ரவி (18), மதுரை அலங்காநல்லூரை சேர்ந்த சக்திவேல் (25), சந்தை பேட்டையை சேர்ந்த செந்தில்குமார் (21), புங்கனூரை சேர்ந்த சாய்மணி (20) உள்பட 21 பேர் காயமடைந்தனர்.

 

மாத்தூர் சன்னாசிப் பட்டியை சேர்ந்த லோகநாதன் (45), பொன்மலைப்பட்டி முல்லை நகரை சேர்ந்த எபி (21), சின்ன சூரியூரை சேர்ந்த சுரேஷ்குமார் (24) ஆகியோர் மேல் சிகிச்சைக்காக திருச்சி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

 

நிகழ்வில் பிடிபடாத காளைகளின் உரிமையாளர்களுக்கும், காளைகளை அடக்கிய வீரர்களுக்கும் தங்கம், வெள்ளி நாணயம், கட்டில், பீரோ, மிக்சி, கிரைண்டர், டேபிள் சேர், ரொக்க பரிசு உள்ளிட்ட பல பரிசுகள் வழங்கப்பட்டன.

 

இனாம்குளத்தூர் வட்டார மருத்துவ அலுவலர் தனலட்சுமி தலைமையிலான 51 பேர் கொண்ட மருத்துவ குழுவினர் காயமடைந்த வீரர்களுக்கு சிகிச்சை அளித்தனர். காவல் கூடுதல் துணைக்கண்காணிப்பாளர்கள் (ஏடிஎஸ்பிகள்) பால்வண்ணநாதன், குத்தாலிங்கம் தலைமையில் 320 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.

 

விழாவிற்கான ஏற்பாடுகளை நவலூர் குட்டப்பட்டு ஊராட்சி மன்ற தலைவர் ஜார்ஜ் பெர்னாண்டஸ், மணியக்காரர்கள் சேவியர்,ஜெரின் ராஜதுரை, பட்டையதாரர்கள் செல்வமணி, செந்தில்குமார், ஒன்றிய கவுன்சிலர்கள் சுபாஷினி சண்முகம், டெல்பின் டேவிட் ராஜதுரை, ஊராட்சி துணைத் தலைவர் கலையரசன் உள்ளிட்டோர் செய்திருந்தனர்.

 

CATEGORIES
TAGS