BREAKING NEWS

திருச்சியில் பள்ளி வேன் கவிழ்ந்து விபத்து – 22 மாணவ மாணவிகள் காயம்.

திருச்சியில் பள்ளி வேன் கவிழ்ந்து விபத்து – 22 மாணவ மாணவிகள் காயம்.

திருச்சியில் பள்ளி வேன் கவிழ்ந்து விபத்து.

திருச்சி மாவட்டம் துப்பாக்கி தொழிற்சாலை அருகே கேந்திரய வித்யாலயா பள்ளி செயல்பட்டு வருகிறது. அந்தப் பள்ளிக்கு 22 மாணவ மாணவிகளை ஏற்றுக்கொண்டு வேன் ஒன்று சென்றுள்ளது. அந்த வேன் திருச்சி மாவட்டம் மாத்தூர் அடுத்துள்ள குமாரமங்கலம் பகுதியில் சென்றபோது பள்ளத்தில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.

 

அந்த விபத்தில் வேனில் பயணித்த மாணவ மாணவிகள் 22 பேரும் காயம் அடைந்தனர். உடனடியாக அப்பகுதி மக்கள் அவர்கள் அனைவரையும் மீட்டனர். ஆம்புலன்ஸ்க்கும் தகவல் தெரிவித்தனர் அதனையடுத்து அங்கு வந்த ஆம்புலன்ஸில் காயம் அடைந்த மாணவ மாணவிகளை அப்பகுதி மக்கள் திருச்சி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

 

வழக்கமாக வரும் ஓட்டுநர் இன்று விடுப்பு எடுத்த காரணத்தால் மாற்று ஓட்டுநர் அந்த வேனை ஓட்டி வந்துள்ளதாகவும், குறுகியலான பகுதியில் வேகமாக வேனை இயக்கியதால் அங்கிருந்த பள்ளத்தில் அது கவிழ்ந்து விபத்துக்குள்ளானது என முதல் கட்ட விசாரணையில் தெரிய வந்துள்ளது. இந்த விபத்து குறித்து மாத்தூர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர்.

CATEGORIES
TAGS