BREAKING NEWS

திருச்செந்தூர் அருகே அரசு பேருந்து கண்ணாடியை சேதப்படுத்தி நடத்துனருக்கு கொலை மிரட்டல் விடுத்தவர் குண்டர் தடுப்புச் சட்டத்தில் கைது

திருச்செந்தூர் அருகே அரசு பேருந்து கண்ணாடியை சேதப்படுத்தி நடத்துனருக்கு கொலை மிரட்டல் விடுத்தவர் குண்டர் தடுப்புச் சட்டத்தில் கைது

தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூர் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் அரசு பேருந்து கண்ணாடியை சேதப்படுத்தி நடத்துனருக்கு கொலை மிரட்டல் விடுத்தவர் குண்டர் தடுப்புச் சட்டத்தில் கைது – மாவட்ட காவல் கண்காணிப்பாளர் எல்.பாலாஜி சரவணன் பரிந்துரையின் பேரில் மாவட்ட ஆட்சியர் கே. செந்தில்ராஜ் நடவடிக்கை.

 

கடந்த 19.03.2023 அன்று திருச்செந்தூர் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பரமன்குறிச்சி பஜார் பகுதியில் வைத்து மதுபோதையில் அவ்வழியாக வந்த அரசு பேருந்தின் கண்ணாடியை உடைத்து சேதப்படுத்தி அந்த பேருந்து நடத்துனருக்கு கொலை மிரட்டல் விடுத்த வழக்கில் திருச்செந்தூர் பரமன்குறிச்சி முந்திரி தோட்டம் பகுதியை சேர்ந்த ரவி மகன் ராகுல் வளவன் (22) என்பவரை திருச்செந்தூர் காவல் நிலைய போலீசார் கைது செய்தனர்.

 

மேற்படி வழக்கில் சம்பந்தப்பட்ட எதிரியான ராகுல் வளவன் மீது குண்டர் தடுப்பு சட்டத்தில் நடவடிக்கை எடுக்க திருச்செந்தூர் காவல் நிலைய ஆய்வாளர் முரளிதரன், தூத்துக்குடி மாவட்ட காவல் கண்காணிப்பாளரிடம் அறிக்கை தாக்கல் செய்தார். மேற்படி காவல் ஆய்வாளரின் அறிக்கையின் அடிப்படையில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் எல்.பாலாஜி சரவணன், தூத்துக்குடி மாவட்ட ஆட்சியருக்கு பரிந்துரை செய்தார்.

 

அதன் பேரில் மாவட்ட ஆட்சியர் கே. செந்தில்ராஜ் திருச்செந்தூர் பரமன்குறிச்சி முந்திரி தோட்டம் பகுதியை சேர்ந்த ரவி மகன் ராகுல் வளவன் என்பவரை குண்டர் தடுப்புச் சட்டத்தில் கைது செய்ய உத்தரவிட்டார். அவரது உத்தரவின் பேரில் திருச்செந்தூர் காவல் நிலைய ஆய்வாளர் முரளிதரன் மேற்படி எதிரியை குண்டர் தடுப்புச் சட்டத்தில் கைது செய்து பாளையங்கோட்டை மத்திய சிறையில் அடைத்தார்.

Share this…

CATEGORIES
TAGS