திருநெல்வேலி மாவட்ட நுகர்வோர் விழிப்புணர்வு பயிலரங்கம்.

மேரிசார்ஜென்ட் பெண்கள் மேல்நிலைப்பள்ளி நாட்டு நலப்பணி திட்டம் திருநெல்வேலி மாவட்ட நுகர்வோர் விழிப்புணர் இயக்கம் இணைந்து ,பள்ளி மாணவியர்களுக்கான நுகர்வோர் விழிப்புணர்வு பயிலரங்கம் சிறப்பு முகாமில் நடைபெற்றது.
நிகழ்விற்கு வந்திருந்தவர்களை என்.எஸ்.எஸ். திட்ட அலுவலர் முனைவர் ஜெ. ஜேனட் ராணி வரவேற்றார்.
பாளையங்கோட்டை வருவாய் வட்டாட்சியர் ஆனந்த பிரகாஷ் தலைமை தாங்கி நுகர்வோர் விழிப்புணர்வு வினாடி வினா போட்டியில் வெற்றி பெற்ற மாணவிகளுக்கு பரிசளித்து சிறப்புரையாற்றினார்.
நுகர்வோர் விழிப்புணர்வு பயிலரங்கில் சங்கர் மேல்நிலைப்பள்ளி குடிமக்கள் நுகர்வோர் மன்ற திட்ட அலுவலர் மற்றும் மாவட்ட நுகர்வோர் விழிப்புணர் இயக்க பொதுச் செயலாளருமான நல்லாசிரியர் கவிஞர் கோ கணபதி சுப்ரமணியன் நுகர்வோர் உரிமை, கடமை, தர முத்திரைகள் தூண்டில் விளம்பரத்தால் ஏற்படும் பாதிப்புகள் போன்றவை குறித்து சிறப்புரையாற்றினார்.
நிறைவாக என்.எஸ்.எஸ் உதவி திட்ட அலுவலர் எஸ். ஆஸ்குயித் ரஞ்சித் ஏஞ்சல் சிங் நன்றி கூறினார்கள். பள்ளி தாளாளர் ஆல்பிரட், தலைமை ஆசிரியை ஈடித் சார்லஸ் ஆகியோர் சிறப்பாக ஏற்பாடு செய்திருந்தார்கள்.
கவிஞர் கோ கணபதி சுப்ரமணியன் பேசியதாவது:-
வல்லவனுக்கு புல்லே ஆயுதம் , நுகர்வோருக்கு பில்லே ஆயுதம். தேவையான பொருட்களை மட்டும் வாங்க வேண்டும். இலவசம் , மலிவு, போன்ற தூண்டில் விளம்பரங்களை நம்பி ஏமாறக்கூடாது.
பொருட்களை வாங்க சொல்லி நடிக்கும் நடிகர்கள் மீதும் நுகர்வோர் பாதுகாப்புச்சட்டத்தில் பாதிப்பு இருந்தால் வழக்கு தொடரலாம். இணையவழி புகாருக்கு நுகர்வோர் குறைதீர் ஆணையத்தை நாட முடியும்.
அக்மார்க், சில்க் மார்க், ஐ.எஸ்.ஐ., ஹால்மார்க், ஐ.எஸ்.ஓ., போன்ற தர முத்திரைகள் பார்த்து பொருட்களை வாங்க வேண்டும் .தரமே நிரந்தரம் என்று பேசினார்.