திருப்பூர்: மாநகராட்சி கூட்டம். ஸ்மார்ட் சிட்டி திட்ட ஊழல் புகாரால் வாக்குவாதம்.

திருப்பூர் மாநகராட்சி மன்ற கூட்டம் கூட்டரங்கில் நடைபெற்று வருகிறது இதில் கேள்வி நேரத்தின் போது இந்திய கம்யூனிஸ்ட் கட்சியை சேர்ந்த மாமன்ற உறுப்பினர்கள் கடந்த அதிமுக ஆட்சியில் திட்டமிடப்பட்ட ஸ்மார்ட் சிட்டி திட்டங்களில் பல்வேறு முறைகேடுகள் நடைபெற்றுள்ளதாக புகார் எழுப்பினர். இதற்கு அதிமுகவை சேர்ந்த மாமன்ற உறுப்பினர்கள் எதிர்ப்பு தெரிவித்து வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இதனால் மாமன்ற கூட்டத்தில் பரபரப்பு ஏற்பட்டது.

CATEGORIES திருப்பூர்
