BREAKING NEWS

திருவள்ளூரில் கர்ம வீரர் காமராஜர் பிறந்தநாளையொட்டி கல்வி வளர்ச்சியில் காமராஜரின் பங்களிப்பு குறித்து பேச்சு போட்டி, ஓவியம் போட்டிகளில் சிறந்தது விளங்கிய மாணவர்களுக்கு பரிசுகள் வழங்கி பாராட்டினார்.

திருவள்ளூரில் கர்ம வீரர் காமராஜர் பிறந்தநாளையொட்டி கல்வி வளர்ச்சியில் காமராஜரின் பங்களிப்பு குறித்து பேச்சு போட்டி, ஓவியம் போட்டிகளில் சிறந்தது விளங்கிய மாணவர்களுக்கு பரிசுகள் வழங்கி பாராட்டினார்.

திருவள்ளூர் சி.எஸ்.ஐ கௌடி மேல்நிலைப் பள்ளியில் பெருந்தலைவர் காமராஜர் பிறந்த நாள் விழா பள்ளி தலைமை ஆசிரியர் எப்சிபா கேத்ரின் தலைமையில் கல்வி வளர்ச்சி நாளாக கொண்டாடப்பட்டது.

 

விழாவில் பங்கேற்று 300-க்கும் மேற்பட்ட மாணவ-மாணவிகள் கல்வி வளர்ச்சி நாள் விழாவையொட்டி காமராஜரின் முகம் பொறித்த முகமூடி அணிந்து திருவள்ளூர் முக்கிய வீதிகளில் விழிப்புணர்வு பேரணியாக சென்றனர். இதனை தொடர்ந்து கல்வி வளர்ச்சியில் காமராஜரின் பங்கு, சுதந்திரம் பெற்றதில் காமராஜரின் பங்களிப்பு, முதலமைச்சராக காமராஜர் ஆற்றிய தொண்டுகள் உள்ளிட்ட பல்வேறு தலைப்புகளில் காமராஜரின் படங்களை ஓவியங்களாக வரைந்தனர்.

 

சிறப்பாக ஓவியங்கள் வரைந்த 9 மாணவ மாணவிகள் தேர்வு செய்யப்பட்டு பரிசுகள் வழங்கப்பட்டன. இதேபோல் காமராஜரின் வாழ்க்கை வரலாறு என்ற தலைப்புகளில் நடைபெற்ற பேச்சு போட்டியில் மாணவ மாணவிகள் ஆர்வமாக, சிறப்பாக பேசினர்.

 

வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டது. தொடர்ந்து மாணவ மாணவிகளுக்கு காமராஜரின் வாழ்க்கை வரலாறு குறித்த புத்தகம் வழங்கப்பட்டது. இந்நிகழ்ச்சியில் ஆசிரியர்கள் மற்றும் மாணவர்கள் கலந்து கொண்டனர்.

Share this…

CATEGORIES
TAGS