BREAKING NEWS

திருவிழா பார்க்க சென்ற ஆறாம் வகுப்பு மாணவன் மாயம்.

திருவிழா பார்க்க சென்ற ஆறாம் வகுப்பு மாணவன் மாயம்.

திருச்சி மாவட்டம் திருவெறும்பூர் அருகே உள்ள பனையக்குறிச்சி பகுதியை சேர்ந்த கூலித் தொழிலாளி மணிவண்ணன் – ரேவதி தம்பதியின் இரண்டாவது மகன் சரவணன் (11) திருச்சியில் உள்ள ஆர்.சி.நடுநிலைப் பள்ளியில் ஆறாம் வகுப்பு படித்து வருகிறான்.

 

இநிலையில் நேற்று காலை சர்க்கார்பாளையம் பகுதியில் பங்குனி உத்திரத்தை முன்னிட்டு பால்குடம் எடுத்து ஊர்வலம் வந்தபோது அதை பார்ப்பதற்காக வீட்டை விட்டு வெளியே வந்த சிறுவன் பனையக்குறிச்சி உதவி காவல் மையம் அருகே நின்றதாக கூறப்படுகிறது.

 

அதன் பின்னர் இரவு வெகு நேரமாகியும் சிறுவன் வீடு திரும்பவில்லை. பெற்றோர்கள் சிறுவனை பல இடங்களில் தேடியும் கிடைக்காததால் உடனடியாக திருவெறும்பூர் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர்.

புகாரின் அடிப்படையில் காணாமல் போன ஆறாம் வகுப்பு மாணவன் சரவணனை திருவெறும்பூர் போலீசார் தேடி வருகின்றனர்.

 

Share this…

CATEGORIES
TAGS