BREAKING NEWS

திருவெறும்பூர் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளி ஆங்கில புலமை பயிற்சியை கலெக்டர் பிரதீப் குமார் துவங்கி வைத்தார்.

திருவெறும்பூர் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளி ஆங்கில புலமை பயிற்சியை கலெக்டர் பிரதீப் குமார் துவங்கி வைத்தார்.

திருச்சி,

திருவெறும்பூர் அருகே துவாக்குடி வடக்கு மலையில் உள்ள ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் பெல் ஆர்.எஸ்.கே பள்ளியில் 1987 ஆம் ஆண்டு படித்த முன்னாள் மாணவர்கள் சங்கம் சார்பில் அரசு பள்ளியில் ஒன்றாம் வகுப்பு முதல் 5ம் வகுப்பு வரை பயிலும் மாணவ மாணவிகளுக்கு ஆங்கில புலமையை பயிற்றுவித்தல் வகுப்பு தொடக்க விழா இன்று நடைபெற்றது.

 

இந்த விழாவிற்கு திருச்சி கலெக்டர் பிரதீப் குமார் தலைமை வைத்து விழாவை தொடங்கி வைத்து மாணவ மாணவிகளுடன் கலந்து உரையாடியபோது பேசியதாவது. ஒவ்வொருவருக்கும் மொழி புலமை அவசியம் அதன் மூலம்தான் மற்றவர்களுடன் உரையாட முடியும்.

 

 

ஒருவரை அடையாளம் காண்பதற்கு அவர் உதவி செய்பவராகவோ பேசுவதில் சிறந்தவராக இருக்க வேண்டும்.

ஊரக பகுதியில் உள்ள மாணவர்கள் பேச முடியாமல் நேர்முக தேர்வுகளில் பல வேலை வாய்ப்புகளை தவறவிடுகிறார்கள் இது நகர்புற மாணவர்களிடமும் தொடர்கிறது. மொழி தொடர்பு மிகவும் முக்கியமான ஒன்றாகும் அதற்காக மாணவ, மாணவிகள் பேசுவதை ஊக்குவிக்க வேண்டும்.

 

 

இதன் மூலம் மாணவர்களிடம் அறிவு வளரும் ஆங்கிலம் தவறாக பேசிவிடுவோமோ என்று பலர் பேசாமலே இருந்து விடுகின்றனர். இதனால் தான் அவர்களால் பிற மொழியை கற்றுக் கொள்ள முடியவில்லை.

 

ஆங்கிலம் எளிமையாக கற்கலாம். மேலும் ஆங்கில செய்திதாள் படிப்பது போன்றவை முக்கியமாக இருக்க வேண்டும்.

நானும் ஒரு அரசு பள்ளியில் படித்தவன் தான் தற்பொழுது யுபிஎஸ் தேர்வு மூலம் கலெக்டரக தேர்வு பெற்றுள்ளேன்.

 

 

நீங்களும் உங்கள் மொழித் திறமையை வளர்த்துக் கொண்டால் பல்வேறு நிலைகளில் முன்னேற முடியும் ஒவ்வொருவரும் எந்த துறையில் தலைசிறந்தவர்கள் என நீங்கள் நினைக்கிறீர்களோ அது உங்களுக்கு தெரிகிறதா அது உங்களது வாழ்க்கைக்கு உதவுமா அது உங்களுக்கு பிடித்து உள்ளதா என்பதை தெரிந்து கொள்ளுங்கள் என்றார்.

 

இந்த விழாவில் மாவட்ட கல்வி அலுவலர் பாலமுரளி, ஆர் எஸ் கே பள்ளியின் முன்னாள் மாணவர் சங்க தலைவர் கண்ணன், சாமிநாதன், ஷீலா மற்றும் நகராட்சி ஆணையர் பட்டுசாமி ஆகியோர் முன்னிலை வைத்தனர்.

 

 

வட்டார வளமைய அலுவலர்கள் ரெஜினா பெஞ்சமின், ஜெஹ்ரா பர்வீன், திருவெறும்பூர் தாசில்தார் ரமேஷ், திருவெறும்பூர் வட்டார வளர்ச்சி அலுவலர்கள் ராஜா, ஸ்ரீதர், மாவட்ட வேளாண் அலுவலர் மல்லிகா மற்றும் அரசு அலுவலர்கள் பலரும் கலந்து கொண்டனர்,

முன்னதாக பள்ளி தலைமை ஆசிரியர் கருணாம்பாள் வரவேற்றார். மாவட்ட தொடக்க கல்வி அலுவலர் பேபி நன்றி கூறினார்.

 

CATEGORIES
TAGS