BREAKING NEWS

தூத்துக்குடி சில்வர்புரம் சபை மக்கள் கோரிக்கை! சேகரத்தை பிரிக்க தடை விதிக்க வேண்டும்:

தூத்துக்குடி சில்வர்புரம் சபை மக்கள் கோரிக்கை! சேகரத்தை பிரிக்க தடை விதிக்க வேண்டும்:

“எந்தவித முன் அறிவிப்பும் இல்லாமல் சில்வர்புரம் ஆலய சபையை டூவிபுரம் சேகரத்திலிருந்து பிரிப்பதை தடை செய்ய வேண்டும் என சபை மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

இது தொடர்பாக தூத்துக்குடி நாசரேத் திருமண்டலம், பிரதம பேராயரின் ஆணையருக்கு சபை மக்கள் அளித்துள்ள மனுவில் “தூத்துக்குடி சில்வர்புரம் பரி. தோமாவின் ஆலயம் இப்பகுதியில் கடந்த 95 ஆண்டுகளுக்கு மேலாக உள்ளது. எங்கள் சபை மக்கள் அனைவரும் சமுதாயத்தில் பின் தங்கிய வகுப்பை சார்ந்தவர்கள். விறகு வெட்டுவது, ஆடு மேய்ப்பது, தினக்கூலி வேலைக்கு செல்வது போன்ற வேலைகளை செய்து அன்றாட தேவைகளை பூர்த்தி செய்து வருகிறார்கள். 

 

 

எங்களுடைய ஆலயத்தின் வளர்ச்சிக்கு சேகரத்தின் தலைமை ஆலயமான டூவிபுரம் பரி.யாக்கோபு ஆலயத்தையே சார்ந்து, டூவிபுரம் சேகரத்தை நம்பியே இருக்கிறோம். அவர்களும் எங்களுடைய நிலைமை அறிந்து அவ்வபோது எங்களுக்கு தேவையான காரியங்களை செய்து சமுதாயத்தில் எங்களையும் அடையாளம் காட்டி உள்ளார்கள். இந்த நிலமையில் தற்போது ஒரு சிலர் தங்களுடைய சுய லாபத்திற்காக எங்களை தனி சேகரமாக பிரித்து விடுவோம் என்று ஆலோசனை செய்து எங்களிடம் கூறி வருகிறார்கள். 

 

 

ஆனால் தனி சேகரமாக உருவாகுவதற்கு நாங்கள் இன்னும் தகுதியானவர்கள் இல்லை. எங்களுக்கு வரும் மாத காணிக்கையும் மிகவும் குறைவு. இதைவைத்து ஒரு சேகரத்தை நடத்துவது எங்களால் முடியாத ஒன்று. நாங்கள் வளர்ச்சியடைவதற்கு வழி இல்லாமல் போய்விடும். எனவே தாங்கள் சுயநலத்திற்காக எங்களை பிரிக்க வேண்டும் என்ற தவறான ஆலோசனைகளை ஏற்றுக்கொள்ளாமல், தொடர்ந்து டூவிபுரம் சேகரத்தோடு இணைந்து தேவனை ஆராதிக்க உதவி செய்ய வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.  

CATEGORIES
TAGS