தேனி கம்மவார் கல்லூரியில் தொழில்நெறி வழிகாட்டும் கண்காட்சி மற்றும் கரத்தரங்கம் மையத்தை, இன்று தேனி ஆட்சியர் முரளிதரன் ரிப்பன் வெட்டி திறந்து வைத்தார்.

தேனி அருகே கொடுவிலார்பட்டி கம்மவர் கல்லூரியில் மாவட்ட வேலை வாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டு மையம் சார்பில் தொழில்நெறி வழிகாட்டும் கண்காட்சி மற்றும் கருத்தரங்க மையத்தை இன்று காலை தேனி மாவட்ட ஆட்சியர் முரளிதரன் ரிப்பன் வெட்டி திறந்து வைத்து குத்து விளக்கு ஏற்றி நிகழ்ச்சியை துவக்கி வைத்தார்.
இந்நிகழ்ச்சியில் மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலர் நாராயணமூர்த்தி அவர்கள் வரவேற்புரை ஆற்றினார்.
தேனி கம்மவர் சங்கம் கலை மற்றும் அறிவியல் கல்லூரி முதல்வர் சீனிவாசன் வாழ்த்துரை ஆற்றினார்.
தேனி டிஎஸ்பி பார்த்திபன், கல்வியாளர் அஜ்மல் கான், பாரத் நிகேதன் பொறியியல் கல்லூரி பேராசிரியர் பால்பாண்டி, போட்டி தேர்வு பயிற்றுனர் தியாகராஜன், தேனி கம்மவார் சங்கம் கலை மற்றும் அறிவியல் கல்லூரி உதவி பேராசிரியர் அறிவழகன் ஆகியோர் முன்னிலை வைத்தனர்.
இந்நிகழ்ச்சியில் மையத்தில் பார்வைக்காக வைக்கப்பட்டிருந்த புத்தகங்களை தேனி ஆட்சியர் பார்வையிட்டார். அப்போது துறை சார்ந்த அதிகாரிகள் உடன் இருந்தனர்.