தேனியருகே பழனியப்பா நினைவு மேல்நிலைப் பள்ளியில் ஆண்டு விழாவை முன்னிட்டு விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது.

தேனி செய்தியாளர் முத்துராஜ்.
தேனி மாவட்டம், பழனிசெட்டிப்பட்டியில் பழனியப்பா நினைவு மேல்நிலைப் பள்ளியில் முதலாம் ஆண்டு விழாவை முன்னிட்டு விழிப்புணர்வு நிகழ்ச்சி பழனியப்பா பாசன பரிபாலன சபை தலைவர் பசுபதி ராம்குமார் தலைமையில் சிறப்பாக நடைபெற்றது.
இந்த நிகழ்ச்சியில் பழனியப்பா நினைவு மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியை ஆண்டாள் வரவேற்புரையும், பழனியப்பா நினைவு மேல்நிலைப் பள்ளி செயலாளர் சரவணகுமார் சிறப்புரையும்,பழனியப்பா பாசன பரிபாலன சபை உறுப்பினர்கள் வாழ்த்துறையும், பழனியப்பா நினைவு மேல்நிலைப்பள்ளி பட்டதாரி உதவி தலைமை ஆசிரியை ஆண்டறிக்கையும் நிகழ்த்தினார்கள்.
பின்னர் இந்த நிகழ்ச்சியில் பழனியப்பா நினைவு மேல்நிலைப்பள்ளி மாணவ மாணவியர்களின் கலைநிகழ்ச்சிகள் ,பிளாஸ்டிக் ஒழிப்பு விழிப்புணர்வு மற்றும் முல்லைப் பெரியாறு அணை உருவான வரலாறு தொடர்பான நாடகம் மற்றும் இசை நிகழ்ச்சிகள் நடைபெற்றது அதனை தொடர்ந்து கலை நிகழ்ச்சிகளில் பங்கேற்ற மாணவ மாணவிகளுக்கு பரிசுகளும் வழங்கபட்டது.
தேனி செய்தியாளர் முத்துராஜ்