BREAKING NEWS

தொடர்ந்து மதுவிலக்கு குற்ற செயலில் ஈடுபட்ட 2 நபர்களை ஓராண்டு குண்டர் தடுப்புச் சட்டத்தில் கைது செய்த கள்ளக்குறிச்சி மாவட்ட காவல்துறை

தொடர்ந்து மதுவிலக்கு குற்ற செயலில் ஈடுபட்ட 2 நபர்களை ஓராண்டு குண்டர் தடுப்புச் சட்டத்தில் கைது செய்த கள்ளக்குறிச்சி மாவட்ட காவல்துறை

கள்ளக்குறிச்சி மாவட்டம், கல்வராயன் மலை வட்டம், மேல்வாழபாடி கிராமத்தைச் சேர்ந்த செல்வம் @செல்வராஜ்(43) த/பெ அண்ணாமலை மற்றும் அரண்மனை புதூர் கிராமத்தைச் சேர்ந்த சத்தியராஜ்(27) த/பெ மாணிக்கம் ஆகியோர் மேல்வாழபாடி கிராமம் மற்றும் அரண்மனை புதூர் கிராம வடக்கு ஓடை அருகே கள்ளச்சாராயம் விற்பனை செய்யும் போது கையும் களவுமாக கரியாலூர் காவல் துறையினறால் கைது செய்யப்பட்டனர்.

 

இவர்கள் தமிழக அரசால் தடைசெய்யப்பட்ட கள்ளச்சாரயம் விற்பனை செய்யும் குற்றத்தில் தொடர்ந்து ஈடுபட்டு வந்துள்ளனர். இவர்கள் மீது கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் கள்ளச்சாராயம் கடத்திய மற்றும் விற்பனை செய்த பல வழக்குகள் நிலுவையில் உள்ளது.

தொடர்ந்து இதுபோன்று மதுவிலக்கு குற்ற செயல்களில் ஈடுபட்டு வருவதால் இவர்களின் நடவடிக்கையை கட்டுபடுத்தும் பொருட்டு, கள்ளக்குறிச்சி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் மோகன்ராஜ் ஓராண்டு குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் சிறையில் அடைக்க பரிந்துரை செய்ததின் பேரில், கள்ளக்குறிச்சி *மாவட்ட ஆட்சியர் ஷ்ரவன்குமார் ஜடாவத் மேற்படி நபர்களை ஓராண்டு குண்டர் தடுப்பு சட்டத்தில் சிறையில் அடைக்க உத்தரவு பிறப்பித்தார். அதன்படி இன்று செல்வராஜ் மற்றும் சத்தியராஜ் கடலூர் மத்திய சிறையில் அடைக்கப்பட்டார்.

 

கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் சமுதாயத்தை சீர்குலைக்கும் கள்ளச்சாராயம், கஞ்சா மற்றும் குட்கா விற்பனை, கடத்தல் போன்ற சட்டத்திற்கு புறம்பான குற்ற செயல்களில் ஈடுபடுவோர் மீது கடும் நடவடிக்கை எடுப்பதுடன் ஓராண்டு குண்டர் தடுப்பு சட்டத்தில் கைது செய்யப்படுவார்கள் என மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அவர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

Share this…

CATEGORIES
TAGS