BREAKING NEWS

தொடர்ந்து மதுவிலக்கு குற்ற செயலில் ஈடுபட்ட நபரை ஓராண்டு குண்டர் தடுப்புச் சட்டத்தில் கைது செய்த கள்ளக்குறிச்சி மாவட்ட காவல்துறை

தொடர்ந்து மதுவிலக்கு குற்ற செயலில் ஈடுபட்ட நபரை ஓராண்டு குண்டர் தடுப்புச் சட்டத்தில் கைது செய்த கள்ளக்குறிச்சி மாவட்ட காவல்துறை

 

கள்ளக்குறிச்சி மாவட்டம், கல்வராயன் மலை வட்டம், சின்னதிருப்பதி கிராமத்தைச் சேர்ந்தவர் வெங்கடேசன்(29) த/பெ சந்திரன் என்பவர் சின்னதிருப்பதி அடிபெருமாள் கோவில் அருகில் கள்ளச்சாராயம் விற்பனை செய்யும் போது கையும் களவுமாக கள்ளக்குறிச்சி மதுவிலக்கு அமலாக்கபிரிவு காவல் துறையினறால் கைது செய்யப்பட்டார்.

 

அப்போது அவரிடம் இருந்து 165 லிட்டர் கள்ளச்சாராயம் மற்றும் ஒரு இருசக்கர வாகனம் கைப்பற்றப்பட்டது. இவர் தமிழக அரசால் தடைசெய்யப்பட்ட கள்ளச்சாரயம் விற்பனை செய்யும் குற்றத்தில் தொடர்ந்து ஈடுபட்டு வந்துள்ளார். இவர் மீது கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் கள்ளச்சாராயம் கடத்திய மற்றும் விற்பனை செய்த பல வழக்குகள் நிலுவையில் உள்ளது.

 

தொடர்ந்து இதுபோன்று மதுவிலக்கு குற்ற செயல்களில் ஈடுபட்டு வருவதால் இவர் நடவடிக்கையை கட்டுபடுத்தும் பொருட்டு, கள்ளக்குறிச்சி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் மோகன்ராஜ் அவர்கள் ஓராண்டு குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் சிறையில் அடைக்க பரிந்துரை செய்ததின் பேரில், கள்ளக்குறிச்சி மாவட்ட ஆட்சியர் ஷ்ரவன்குமார் ஜடாவத் மேற்படி நபரை ஓராண்டு குண்டர் தடுப்பு சட்டத்தில் சிறையில் அடைக்க உத்தரவு பிறப்பித்தார். அதன்படி வெங்கடேசன் கடலூர் மத்திய சிறையில் அடைக்கப்பட்டார்.

 

கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் சமுதாயத்தை சீர்குலைக்கும் கள்ளச்சாராயம், கஞ்சா மற்றும் குட்கா விற்பனை, கடத்தல் போன்ற சட்டத்திற்கு புறம்பான குற்ற செயல்களில் ஈடுபடுவோர் மீது கடும் நடவடிக்கை எடுப்பதுடன் ஓராண்டு குண்டர் தடுப்பு சட்டத்தில் கைது செய்யப்படுவார்கள் என மாவட்ட காவல் கண்காணிப்பாளர், மோகன்ராஜ் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

CATEGORIES
TAGS