நந்திவரம் கூடுவாஞ்சேரி நகராட்சி நகர்மன்ற கூட்டத்தில் 50தீர்மானங்கள் நிறைவேற்றம்..

செய்தியாளர் செங்கை ஷங்கர்.
செங்கல்பட்டு மாவட்டம் நந்திவரம்-கூடுவாஞ்சேரி நகர் மன்ற கூட்டம் நகராட்சி அலுவலகத்தில் நடைபெற்றது.
நகர் மன்ற தலைவர் எம்.கே.டி.கார்த்திக் தண்டபாணி தலைமையில் நடைபெற்ற இந்த கூட்டத்தில் நகர் மன்ற துணைத் தலைவர் வழக்கறிஞர் ஜி.கே.லோகநாதன், நகராட்சி ஆணையாளர் இளம்பரிதி மற்றும் நகர மன்ற கவுன்சிலர்கள் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
கூட்டத்தின் துவக்கத்தில் கடந்த மாதம் பெய்த கனமழை மற்றும் மாண்டஸ் புயலின் தாக்கத்திலும் மழைநீர் தேங்காமல் அசம்பாவிதம் ஏதும் நடைபெறாமல் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்த தமிழக அரசு அமைச்சர் தா.மோ. அன்பரசன், மாவட்ட ஆட்சியர்,
காஞ்சிபுரம் பாராளுமன்ற உறுப்பிர், சட்டமன்ற உறுப்பினர் மற்றும் நந்திவரம் கூடுவாஞ்சேரி நகர் மன்ற தலைவர் துணைத்தலைவர் உள்பட அனைவருக்கும் அனைத்து வார்டு உறுப்பினர்கள் தங்களது நன்றியை தெரிவித்து கொண்டனர்.
மேலும் இக்கூட்டத்தில் நகராட்சி பகுதி முழுவதும் முக்கிய சாலை சந்திப்புகளில் குற்ற சம்பவங்களை தடுப்பதற்காக சிசிடிவி கண்காணிப்பு கேமராக்கள் பொருத்துதல்,
நகராட்சி பகுதியில் உள்ள சாலைகளில் சுற்றித் திரியும் மாடுகளை பிடித்து பட்டியில் அடைத்து வைத்து மாட்டின் உரிமையாளர்களுக்கு 10 ஆயிரம் ரூபாய் அபராதம் விதித்தல், 3 நாட்களுக்குள் மாட்டின் உரிமையாளர் அபராதம் கட்ட தவறினால் பிடிபட்ட மாடுகளை பொதுஏலம் விடப்படும்,
ஏற்தனவே ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி மற்றும் நடுநிலைப் பள்ளிகள் நந்திவரம் கூடுவாஞ்சேரி நகராட்சியிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.
அந்த பள்ளிகளில் குடிநீர் வசதி புதிய கழிப்பறை வசதிகள் அமைத்து புதுப்பித்து பள்ளியில் ஸ்மார்ட் வகுப்பறைகள் அமைக்கப்படும் நெல்லிக்குப்பம் சாலையில் மின்விளக்குகள் அமைக்கப்படும், மகாலட்சுமி நகர், காமாட்சி நகர், சிற்பி நகர் ஆகிய பகுதிகளில் 1கோடிரூபாய் மதிப்பீட்டில் சிறு பாலங்கள் கட்டப்படும்.
நகராட்சி முழுவதும் தெருக்களின் பெயர் பலகைகள் புதிக்கப்படும். மேலும் நகராட்சிக்கு உட்பட்ட பகுதியில் உள்ள ரேஷன் கடை, அங்கன்வாடி மையங்களை புதுப்பித்தல்,
செயல்பாட்டில் உள்ள பூங்காக்களில்பு திய மின்விளக்குகள் அமைத்தல் உள்பட 50 தீர்மானங்கள் ஒருமனதாக நிறைவேற்றப்பட்டது.