நவீன மயமாக்கப்பட்ட சிறைவாசிகள் நேர்காணல் அறை திறப்பு.

பாளையங்கோட்டை மத்திய சிறையில் உள்ள தண்டனை மற்றும் விசாரணை சிறைவாசிகள் சுமார் 1353 சிறைவாசிகள் அவர்களது உறவினர்களுடன் நேர்காணல் செய்யும் அறையானது முற்றிலும் நவீனமயமாக்கப்பட்டு இன்று திறப்பு விழா செய்யப்பட்டுள்ளது.
மூன்றாவது போலீஸ் கமிஷன் பரிந்துரை மற்றும் அரசாணை எண் 1635 Home(pol x1) & 1346 Home ( prison v)வழிகாட்டு நெறிமுறைகளை பின்பற்றி இந்த நவீன நேர்காணல் அறை வடிவமைக்கப்பட்டுள்ளது சிறைவாசிகள் எந்தவித தொந்தரவும் இன்றி அவர்களது உறவினரிடம் இண்டர்காம் தொலைபேசி வசதி மூலம் பேசும் வசதி , கண்ணாடி தடுப்பு அறைகள் ,கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டு முற்றிலும் நவீனமாக மாற்றப்பட்டுள்ளது.
இதுவரை தமிழக சிறைத் துறையில் புழல் மத்திய சிறை மற்றும் கோயமுத்தூர் மத்திய சிறை மதுரை மத்திய சிறை வேலூர் மத்திய சிறைகளை தொடர்ந்து பாளையங்கோட்டை மத்திய சிறைக்கு இத்திட்டம் விரிவாக்கம் செய்யப்பட்டுள்ளது.
இந்த நேர்காணல் அறையை சட்டம் மற்றும் நீதித்துறை அமைச்சர் திரு எஸ் ரகுபதி அவர்களின் வழிகாட்டுதலின் படியும் சிறைகள் மற்றும் சீர்திருத்த பணிகள் துறை இயக்குனர் திரு அமரேஷ் பூஜாரி I.P.S அவர்களின் உத்தரவிற்கிணங்க மதுரை சரக சிறைத்துறை துணைத் தலைவர் திரு பழனி அவர்களின் தலைமையில் திறந்து வைக்கப்பட்டது.சிறையின் கூடுதல் கண்காணிப்பாளர் திரு.வினோத் முன்னிலை வகித்தார்.