BREAKING NEWS

நாகர்கோவிலில் திங்கள் கிழமை (07.07.2025) தமிழக அரசால் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் 7.5 கிலோ பறிமுதல். கடை சீல்

நாகர்கோவிலில் திங்கள் கிழமை (07.07.2025) தமிழக அரசால் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் 7.5 கிலோ பறிமுதல். கடை சீல்

கன்னியாகுமரி மாவட்டம், நாகர்கோவில் மாநகராட்சியில் மாவட்ட ஆட்சியர்  அறிவுறுத்தல் படியும் வணக்கத்திற்குரிய மேயர் அவர்களின் அறிவுறுத்தல் படியும், நாகர்கோவில் மாநகராட்சி ஆணையரின்  உத்தரவு படியும் திங்கள் கிழமை (07.07.2025) அன்று தமிழக அரசால் தடை செய்யப்பட்ட புகையிலை மற்றும் நிக்கோட்டின் கலந்த உணவு பொருட்கள் சோதனை நாகர்கோவில் மாநகராட்சி மாநகர் நல அலுவலர் மரு.ஆல்பர் M.மதியரசு அவர்களின் தலைமையில் நடைபெற்றது.

இந்த சோதனையில் நாகர்கோவில் மாநகராட்சிக்குட்பட்ட வடசேரி கனகமூலம் சந்தை பகுதியில் சுமார் 100 கடைகளில் சோதனை நடைபெற்றது.

இந்த சோதனையில் சந்தையில் 7.5கிலோ புகையிலை பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டது.மேல்நடவடிக்கைக்காக வழங்கப்பட்டது. மேலும் கடை சீல் வைக்கப்பட்டது.

மேற்படி சோதனையின் போது மாநகராட்சி மாநகர் நல அலுவலர் மரு.ஆல்பர் M.மதியரசு அவர்களோடு துப்புரவு அலுவலர் திரு.ராஜாராம் மற்றும் துப்புரவு மேற்பார்வையாளர் குமார் மற்றும் மேற்பார்வையாளர்கள் தவசி, சுப்பிரமணியன், சரவணன் மற்றும் தூய்மை இந்தியா திட்ட ஒருங்கிணைப்பாளர் விக்னேஷ் மேற்பார்வையாளர் பழனி சரண் பரப்புரையாளர்கள் ஷோபா, கோகிலா, அற்புதம், சாந்தி, நவீன், சிங்காரவேலு ஆகியோர் உடன் இருந்தனர்.

CATEGORIES
TAGS