நிலக்கோட்டை அருகே தனியார் கல்குவாரியில் வெடிக்கும் பாறைகள் பறந்து வீடுகளில் விழுந்ததால் பரபரப்பு

திண்டுக்கல் செய்தியாளர் ம.ராஜா
திண்டுக்கல் மாவட்டம், நிலக்கோட்டை அருகே உள்ள முசுவனூத்து ஊராட்சியில் உள்ள மிளகாய்பட்டி, முசுவனூத்து 2 கிராமங்களுக்கு இடையே ஒரு தனியார் கல்குவாரி அமைக்கப்பட்டுள்ளது.
இந்த கல்குவாரியில் இன்று பெரிய அளவில் சத்தம் கேட்டு கிராம பொதுமக்களை அச்சுறுத்தியது மட்டுமல்லாமல் பக்கத்தில் உள்ள வீடுகளில் வெடித்து வந்த கற்கள் பறந்து வீட்டின் ஓடு மற்றும் பல்வேறு வகையில் சிதறி விழுந்தது.
அதேபோன்று பட்டப்பகலில் வெடித்ததால் அந்தப் பகுதியில் சிறுவர்கள் மற்றும் பெரியோர்கள் விளையாடிக் கொண்டிருந்தவர்களும் பயந்து அரண்டனர். பிடி போடுவதை அந்த கல்குவாரியை சேர்ந்தவர்கள் அக்கம்பக்கம் தெரிவிக்காமல் திடீரென வெடிக்கும் சம்பவம் அடிக்கடி நிகழ்வதால் பொதுமக்கள் அச்சத்தில் உள்ளார்கள்.
வீட்டில் கற்கள் பறந்து மேற்கூறையில் விழுந்ததால் வீட்டில் இருந்து அனைவரும் தப்பி ஓடி வெளியே வந்தனர். இந்நிலையில் இன்று மாலை போட்ட வெடி மிக அதிவேகமான சத்தத்துடன் வெடித்ததில் அதன் அருகே உள்ள வீடுகளில் விழுந்து சேதம் அடைந்தது.
அப்போது அப்பகுதியில் பூமியை அதிர்வது போன்று தெரிந்ததாக அதை பார்த்த விவசாயிகள் தெரிவித்தனர். எனவே இதுகுறித்து நிலக்கோட்டை போலீஸ் மற்றும் தாலுகா அலுவலகத்திற்கு புகார் கொடுத்து உள்ளார்கள்.
இது போன்று பலமுறை நடந்துள்ளதாக விவசாயிகளும் பொதுமக்களும் தெரிவிக்கின்றன இதுகுறித்து பலமுறை போலீஸ் நிலையம் மற்றும் உயர்மட்ட அதிகாரிகளுக்கு மனு கொடுத்தும் இதுவரை எந்தவிதமான நடவடிக்கையும் எடுக்கவில்லை என்று குற்றம் சாட்டு வருகிறார்கள்.
இந்நிலையில் சம்பவத்தை பார்த்த பொதுமக்கள் ஆத்திரமடைந்து கிராம விவசாயிகள் உடனடியாக கல்குவாரியில் பணியாற்றும் ஊழியர்களிடம் சென்று தகராறு செய்தனர். இதனால் பொதுமக்களுக்கும், ஊழியர்களுக்கும் வாய் தகராறு ஏற்பட்டது.
இதன் பின்னர் இப்பகுதி விவசாயிகளும், குடியிருப்பு பொதுமக்களும் திரண்டு ஒட்டு மொத்தமாக கல்குவாரியயை மூட வேண்டும் மாவட்ட ஆட்சியருக்கு கோரிக்கை மனுவை அனுப்பி உள்ளார்கள் என்பது குறிப்பிடத்தக்கது. இச்சம்பவம் இப்பகுதியில் பரபரப்பு ஏற்படுத்தி உள்ளது.