நெல்லை மாவட்டம் பழவூரில் பயன்பாடின்டி காட்சி பொருளாக காணும் ஒருங்கிணைந்த மகளிர் சுகாதார வளாகத்தை பராமரிக்க பொதுமக்கள் கோரிக்கை.

திருநெல்வேலி மாவட்டம் வள்ளியூர் ஊராட்சி ஒன்றியத்திற்கு உட்பட்ட பழவூரில் கடந்த 2017-18ம் நிதி ஆண்டில் ஒருங்கிணைந்த மகளிர் சுகாதார வளாகம் கட்டப்பட்டது. சுகாதார வளாகத்தை மகளிர் மேம்பாட்டு மன்றம், சுய உதவிக் குழு ஊராட்சி அளவிலான கூட்டமைப்பு ஆண்டுதோறும் பராமரித்து மகளிர்களின் பயன்பாட்டிற்காக கொண்டு வர வேண்டும் என்பது அரசு விதியாகவும், அதற்கான நடவடிக்கையாகவும் இருந்து வந்தது.
அதன் பேரில் சில ஆண்டுகளாக சுகாதார வளாகம் பராமரிக்கப்பட்டு தகுந்த பயன்பாடு கொண்டதாக இருந்து வந்தது. தற்போது முழுமையான அளவில் சுகாதார வளாகத்தின் பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்படாததால் கட்டடங்கள் சிதலமடைந்து காணப்படுகிறது.
இதனால் பொதுமக்கள் பயன்பாடு இன்றி கட்டடங்கள் சிதலமடைந்து காட்சி பொருளாக காணப்படுகிறது எனவே பொதுமக்கள் நலன் கருதி செல்லும் இடத்து காணப்படும் சுகாதார வளாகத்தை சீரமைக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை எடுத்துள்ளனர்.
செய்தியாளர் மணிகண்டன்.