BREAKING NEWS

பண்டாரவடை அருகே மூடியே கிடக்கும் ஆளில்லாத ரயில்வே ரெவல் கிராசிங் கேட் கீப்பர் மூலம் திறந்து மூட பொதுமக்கள். விவசாயிகள் கோரிக்கை.

பண்டாரவடை அருகே மூடியே கிடக்கும் ஆளில்லாத ரயில்வே ரெவல் கிராசிங் கேட் கீப்பர் மூலம் திறந்து மூட பொதுமக்கள். விவசாயிகள் கோரிக்கை.

தஞ்சை கும்பகோணம் ரயில்வே மார்க்கத்தில் பாபநாசம் பண்டாரவாடை ரயில்நிலையங்களுக்கு இடையே உள்ள ராஜகிரி உப்பு காரன் கேட் ஆளில்லாத ரயில்வே லெவல் கிராசிங் உள்ளது.

இந்த லெவல் கிராசிங்கை கடந்து ஆயிரத்துக்கும் மேற்பட்ட ஏக்கர் விவசாய நிலங்கள் குடியிருப்புகள் உள்ளன கேட் கீப்பர் இல்லாததால் பூட்டிய நிலையில் கேட் உள்ளதால் இந்த லெவல் கிராசிங்கை கடந்து விவசாய நிலங்களுக்கு உழவு. அறுவடை இயந்திரங்கள் வேளாண் இடுபொருள்கள் எடுத்து செல்லவோ….

குடியிருப்புவாசிகள் அவசரத்துக்கு சென்று வரவோ முடியாமல் விவசாயிகள் குடியிருப்பு வாசிகள் தினசரி அவதியுற்று வருகின்றனர். ரயில்வே நிர்வாகம் உடனடியாக ராஜகிரி உப்பு காரன் கேட் லெவல் கிராசிங்கிற்கு கேட் கீப்பர் நியமித்து, ரயில் வராத நேரங்களில் வாகனங்கள்,. பொதுமக்கள் லெவல் கிராசிங்கை கடந்து செல்ல ரயில்வே கேட்டை திறந்து வைக்க நடவடிக்கை எடுக்கும்படி பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

செய்தியாளர் எஸ்.மனோகரன்.

CATEGORIES
TAGS