பண்டைய காலத்தில் பொதுமக்களின் அன்றாட அத்தியாவசிய பொருட்களாக பயன்படுத்திய அரிய வகை உபகரணங்கள் தற்போதைய 2 k கிட்ஸ் குழந்தைகளுக்காக கண்காட்சி அமைக்கப்பட்டுள்ளது.

செய்தியாளர் மணிகண்டன்.
திருநெல்வேலி மாவட்டம் வடக்கன்குளம் பாலகிருஷ்ணா மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் கண்காட்சி மையம் அமைக்கப்பட்டுள்ளது. இதில் பண்டைய கால மக்கள் பயன்படுத்தியும், தற்போதைய நவ நாகரீக காலத்தில் மறைந்து போன வீடுகளில் இருந்து வந்த உபகரணங்கள், விவசாய பயன்பாட்டிற்கு செயல்படுத்திய உபகரணங்களும் கொண்ட கண்காட்சி அமைக்கப்பட்டு மாணவ மாணவிகளுக்கு அதன் பெருமை பறைசாற்றப்பட்டு வருகிறது. அகமகிழ் கலையகம் சார்பில் அமைக்கப்பட்டுள்ள இந்த கண்காட்சியில் சுமார் 1000க்கும் மேற்பட்ட உபகரணங்கள் இடம் பெற்றுள்ளன.
இக்கண்காட்சியின் முக்கிய நோக்கம், முன்னோர்கள் பயன்படுத்திய அரியவகை உபயோக பொருட்களை 2000 கே கிட்ஸ் குழந்தைகள் அறிய வேண்டும் என்பது குறிப்பிடத்தக்க அம்சமாகும். கண்காட்சியில் 50 வயதிற்கு மேற்பட்டவர்கள் கூட கண்டிருக்க முடியாத அரிய வகை பொருட்கள் இடம் பெற்றுள்ளன.
வேட்டையாட பயன்படுத்திய ஆயுதங்கள், சுதந்திர காலத்தின் போது மணப்பெண்ணுக்கு சீர்வரிசையாக வழங்கப்பட்ட டிரங் பெட்டி, பித்தளை செம்பு பாத்திரங்கள், முன்னோர் கால ரூபாய் நோட்டுகள், நாணயங்கள், அறிக்கை விளக்குகள், பழங்கால அஞ்சலரை பெட்டி, அறுவடை காலங்களில் பயன்படுத்தப்படும் மரக்கா, பக்கா, நாழி போன்றவை இடம் பெற்றுள்ளன.
கூடுதல் பங்களிப்பாக ஓலைச்சுவடிகள், மண், கல் போன்றவைகளால் ஆன பாத்திரங்கள், கையினால் துணிகளை தைக்கும் கையடக்க தையல் இயந்திரம், நூல் ராட்டை ஆகியவை கண்காட்சியை அலங்கரிக்கின்றன. விளம்பரங்களுக்காக தற்போதைய நாகரீக காலத்தை காட்டிலும் தீப்பெட்டிகளில் விளம்பரம் செய்து வந்ததை கண்காட்சி நினைவுபடுத்துகிறது.
பழங்கால டெலிபோன்கள், 16 கிலோ எடை கொண்ட டேபிள் ஃபேன், அறிமுகமாகி வெளிவந்த முதலாவது டிவி, இரும்பு எடைகற்கள், பாரம்பரியமிக்க குழந்தைகளின் விளையாட்டு உபகரணங்களும் கண்காட்சியை முக்கியத்துவம் வாய்ந்ததாக மாற்றி உள்ளது. பெரிதும் வரவேற்பை அழிக்கும் விதமாக 1931ம் பத்திரம் இடம் பெற்றிருப்பது வரலாற்று நிகழ்வாக கருதப்படுகிறது.
இதுகுறித்து பள்ளி மாணவி நித்யஸ்ரீ கூறுகையில், பண்டைய காலத்தில் இது போன்று உபகரணங்களை பயன்படுத்தி இருப்பது அறிய வாய்ப்பு கிடைத்தது. முன்னோர்கள் வாழ்ந்ததை சுட்டிக்காட்டும் வகையில் கண்காட்சி எங்களுக்கு உற்சாகம் ஊட்டுவதாகவும் கூடுதல் தகவல்களை தெரிந்து கொள்ளவும் வாய்ப்பாக அமைந்துள்ளது என்று கூறினார்.
மாணவி நிவாஸினி, ஆச்சரியமூட்டும் வகையில் பலவிதமான விளக்குகளை அறிந்து கொள்ள இந்த கண்காட்சி சிறந்த வாய்ப்பை உருவாக்கி தந்துள்ளது. மாடுகளை கட்டி தண்ணீர் இறைத்து வயல்களில் பாய்ச்சிய உபகரணம் வீட்டில் வாழ்த்தி உள்ளது என்றார்.
மாணவர் தருண் சாம், பண்டைய காலத்தில் அறிமுகமான டிவி, டேப் ரெக்கார்டர், டெலிபோன்கள் இன்றளவும் பாதுகாத்து வைத்து மாணவ மாணவிகள் அறிந்து கொள்ள நடத்திய கண்காட்சி பெருமைக்குரியது என்றார்.
மாணவி கயல், கண்காட்சியின் வாயிலாக முன்னோர்கள் வாழ்ந்த நிலையை வாழ்க்கையை உணர முடிகிறது. இப்போதெல்லாம் சுவிட்ச் போட்டால் மோட்டார் மூலம் தண்ணீர் பெற முடியும். நமது முன்னோர்கள் கமலையை பயன்படுத்தி வயல்களில் தண்ணீர் பாய்ச்சி செயல்பட்டு உள்ளனர். கண்காட்சியின் வாயிலாக அதனை காணும் போது மிகவும் என்பதை அறிந்து கொள்கிறேன் என்றார்.
இக்கண்காட்சியை அமைத்து மாணவ மாணவிகளுக்கு பண்டைய கால மூதாதையர்களின் செயல்பாட்டை நெல்லையைச் சேர்ந்த லெனின் என்பவர் செய்துள்ளார்.
அவர் கூறுகையில் இதுபோன்ற மூதாதையர்கள் பயன்படுத்திய உபகரணங்களை பள்ளி கல்லூரிகளில் 14 வயது முதல் செய்து வருகிறேன். இதனை காணும் மாணவ மாணவிகள் ஆச்சரியமடைந்து வருகின்றனர். இதன் தொடர்பாக தமிழன் கலைநயத்துடனும் வாழ்ந்து வருகிறான் என்பதற்கு சிறந்த எடுத்துக்காட்டாக இக்கண்காட்சி அமையும்.