பள்ளி மாணவ, மாணவியர்களுக்கு சாலை பாதுகாப்பு குறித்தும் போதை பொருட்கள் உட்கொள்வதால் ஏற்படும் தீமைகள் குறித்து விழிப்புணர்வு.

திருநெல்வேலி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அறிவுரையின் படி மாவட்ட காவல்துறையினர் பள்ளி மாணவ, மாணவியர்களுக்கு சாலை பாதுகாப்பு குறித்தும் போதை பொருட்கள் உட்கொள்வதால் ஏற்படும் தீமைகள் குறித்தும்,
பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான குற்றங்கள் குழந்தைகள் பாதுகாப்பு மற்றும் காவல் உதவி செயலி பற்றி தொடர் விழிப்புணர்வை ஏற்படுத்தி வருகின்றனர் அதன்படி இன்று தாழையூத்து, பகுதியில் உள்ள சங்கர் மேல்நிலை பள்ளி மாணவ மாணவியர்களுக்கு தாழையூத்து காவல் ஆய்வாளர் சந்திரசேகர் மற்றும் காவல்துறையினர்,
சாலை பாதுகாப்பு குறித்தும், போதை பொருட்கள் உட்கொள்வதால் ஏற்படும் தீமைகள் குறித்தும், பெண்கள் மற்றும் குழந்தைகள் பாதுகாப்பு குறித்தும் பெண்கள் குழந்தைகளுக்கு எதிரான குற்றங்கள்,
குறித்தும் பெண்கள் உதவி மையம் இலவச தொலைப்பேசி எண் 181 குறித்தும், குழந்தைகளுக்கு எதிரான குற்றச்சாட்டுக்களை தெரிவிக்க 1098 என்ற இலவச தொலைபேசி எண் குறித்தும்,
காவல் உதவி செயலி மற்றும் குழந்தை திருமணம் குறித்தும் விழிப்புணர்வு ஏற்படுத்தினார்கள். பாளையங்கோட்டை செய்தியாளர் சங்கர நாராயணன்.