BREAKING NEWS

பாபநாசத்தில் அய்யம்பேட்டை புதிய பால கட்டுமான பணிகளை விரைந்து முடிக்க இந்திய கம்யூனிஸ்ட் மார்க்சிஸ்ட் லெனிஸ்ட் கட்சியின் சார்பில் வலியுறுத்தல்.

பாபநாசத்தில் அய்யம்பேட்டை புதிய பால கட்டுமான பணிகளை விரைந்து முடிக்க இந்திய கம்யூனிஸ்ட் மார்க்சிஸ்ட் லெனிஸ்ட் கட்சியின் சார்பில் வலியுறுத்தல்.

தஞ்சாவூர் மாவட்டம் பாபநாசம் அருகே அய்யம்பேட்டை குடமுருட்டி ஆற்றில் பழுதடைந்த பழைய பாலத்திற்கு அருகில் புதிய பாலம் ஒன்று கட்டப்பட்டு வருகிறது.

புதிய பால கட்டுமான பணிகளின் போது பழைய பாலத்தின் வடபுற சாலை சரிந்து விழுந்தது. இதனால் அய்யம்பேட்டை -கணபதி அக்ரகாரம் சாலை துண்டிக்கப்பட்டது.

அய்யம்பேட்டை வடபுறத்தில் உள்ள 30க்கும் மேற்பட்ட கிராம மக்கள் 10 கிலோ மீட்டர் சுற்றி அய்யம்பேட்டைக்கு வர வேண்டியுள்ளது.


எனவே புதிய பால கட்டுமான பணிகளை விரைந்து முடிக்கவும், அது வரை தற்காலிக பாதை அமைத்து தர வேண்டியும் இந்திய கம்யூனிஸ்ட் ( மார்க்சிஸ்ட் லெனினிஸ்ட் கட்சியின் ) (சி.பி.எம்.எல்) சார்பில் அய்யம்பேட்டை பஸ் நிறுத்தம் அருகே ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

மேலும் 30 கிராமங்களின் மக்களின் நலன் கருதியும் மாவட்டம் நிர்வாகம் பொதுப்பணித்துறையினர் விரைவாக பாலத்தின் பணிகளை முடிக்க வேண்டும் எனவும் தாமதமானால் மக்களை திரட்டி சாலை மறியலில் ஈடுப்பட போவதாகவும் தெரிவித்தனர்.

Share this…

CATEGORIES
TAGS