பாபநாசம் அருகே தேவராயன்பேட்டையில் பிரசித்தி பெற்ற ஸ்ரீ மகா மாரியம்மன் ஆலய பால்குடம் மற்றும் காவடி திருவிழா வெகு விமர்சையாக நடைபெற்றது.

தஞ்சாவூர் மாவட்டம் பாபநாசம் அருகே தேவராயன் பேட்டையில் ஸ்ரீ மகா மாரியம்மன் ஆலய பால்குடம் மற்றும் காவடி மாபெரும் திருவிழா வெகு விமர்சியாக நடைபெற்றது.
திருவிழாவில் பக்தர்கள் தங்களின் நேர்த்தி கடனான பால்குடம் மற்றும் காவடி ஆற்றங்கரையிலிருந்து முக்கிய வீதிகளின் வழியாக கோவிலை வந்தடைந்தது.
இந்த திருவிழாவில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு நேத்து கடனையும் செலுத்தினர். பின்பு அம்மனுக்கு தீப ஆராதனை காட்டி பக்தர்கள் வழிபட்டனர்.
பாபநாசம் செய்தியாளர் ர.தீனதயாளன்.
CATEGORIES ஆன்மிகம்
TAGS ஆன்மிகம்தஞ்சாவூர்தஞ்சாவூர் மாவட்டம்தஞ்சை பாபநாசம்தமிழ்நாடுதலைப்பு செய்திகள்தேவராயன்பேட்டைமுக்கிய செய்திகள்ஸ்ரீ மகா மாரியம்மன் ஆலய காவடி திருவிழா