BREAKING NEWS

பாம்பு கடித்து இறந்த குழந்தையின் மலை கிராமத்திற்கு நேரில் சென்ற வேலூர் மாவட்ட ஆட்சியர்!!! —- சாலை வசதி துணை ஆரம்ப சுகாதார நிலையம் அமைக்க நடவடிக்கை.

பாம்பு கடித்து இறந்த குழந்தையின் மலை கிராமத்திற்கு நேரில் சென்ற வேலூர் மாவட்ட ஆட்சியர்!!! —- சாலை வசதி துணை ஆரம்ப சுகாதார நிலையம் அமைக்க நடவடிக்கை.

வேலூர் மாவட்டம் அணைக்கட்டு தாலுக்கா அல்லேரி மலை கிராமத்தைச் சேர்ந்த சுதர்சன் இவரது மகள் தனுஷ்கா வயது 2 அத்தி மரத்து கொள்ளை கிராமத்தில் வீட்டின் முன்பு குழந்தை தனுஷ்காவுடன் தூங்கிக் கொண்டிருந்தார். அப்பொழுது தனுஷ்காவை பாம்பு கடித்தது.

சாலை வசதி இல்லாத காரணத்தால் குழந்தையை 10 கிலோமீட்டர் தூரம் நடந்தபடி கையால் தூக்கிக்கொண்டு அணைக்கட்டு ஆரம்ப சுகாதார நிலைய மருத்துவமனைக்கு கொண்டு செல்ல நீண்ட நேரம் ஆகிவிட்டது. இதனால் விஷம் உடல் முழுவதும் பரவி வழியிலேயே குழந்தை தனுஷ்கா இறந்துவிட்டார்.

 

இதனை அடுத்து குழந்தையின் உடலை வீட்டிற்கு எடுத்துச் செல்ல போதிய வசதி இல்லாமல் பாதி வழியிலேயே ஆம்புலன்ஸ்சிலிருந்து இறக்கி விட்டனர். எனவே அங்கிருந்து மீண்டும் குழந்தையை ஊழியர்கள் சிறிது தூரம் இருசக்கர வாகனத்தில் எடுத்துச் சென்றுள்ளார்கள். பின் உடலை கால்நடையாக சுமார் 10 கிலோமீட்டர் தூரம் மலைப்பகுதிக்கு மீண்டும் கையால் தூக்கி சென்றுள்ளனர்.

 

இந்த சம்பவம் சமூக வலைத்தளங்களில், ஊடகங்கள் மற்றும் பத்திரிகையில் போட்டோக்கள் மற்றும் வீடியோக்கள் மூலம் வைரலாகப் பரவியது . இதனால் நாடு முழுவதும் இது குறித்து பரபரப்பாக பேசப்பட்டது.

எந்த நிலையில் வேலூர் மாவட்ட ஆட்சித் தலைவர் குமரவேல் பாண்டியன் பாம்பு கடித்து இருந்த குழந்தையின் கிராமமான அத்திமர கொல்லைக்கு நேரில் சென்று ஆய்வு மேற்கொண்டார். இறந்த குழந்தை தனுஷ்காவின் வீட்டிற்கு நேரில் சென்றார்.

என்ன தனுஷ்காவின் பெற்றோருக்கு ஆறுதல் கூறியவர் ரூபாய் 25000 உதவித்தொகை வழங்கினார். பின்னர் நிருபர்களுக்கு பேட்டியளித்தார் அப்பொழுது அவர் கூறியதாவது:-

ரோடு வசதி இல்லாத இந்த பகுதி மலை கிராமங்களுக்கு ரூபாய் ஐந்து கோடி செலவில் புதிய சாலை அமைக்கப்படும் அதற்காக வனத்துறையிடம் அனுமதி வழங்கப்படும் மேலும் இப்பகுதி மக்களின் நலனுக்காக துணை ஆரம்ப சுகாதார நிலையம் அமைக்கப்படும் என்றார்.

CATEGORIES
TAGS