புதிய பாஸ்போர்ட் எடுப்பதற்கு வந்த 100க்கும் மேற்பட்டவர்கள், தஞ்சை மண்டல பாஸ்போர்ட் அலுவலகம் பூட்டப்பட்டு இருப்பதால் அலுவலகத்தை முற்றுகை.

தஞ்சை மருத்துவக்கல்லூரி சாலையில் மண்டல பாஸ்போர்ட் அலுவலகம் செயல்பட்டு வருகிறது. கடந்த 22ம் தேதி 300க்கும் மேற்பட்டவர்கள் தஞ்சை, கும்பகோணம், பட்டுக்கோட்டை, வடசேரி, பேராவூரணி உள்ளிட்ட பல பகுதிகளில் இருந்து புதிதாக பாஸ்போர்ட் எடுக்கவும், மறுபதிவு செய்வதற்கும் வந்துள்ளனர்.
அன்று பிற்பகலுக்கு பின்னர் தொழில்நுட்ப கோளாறு ஏற்பட்டுள்ளது. இதனை அடுத்து மறு தேதி குறித்து குறுஞ்செய்தி வரும். அப்போது வந்தால் போதும் என கூறி பெரும்பாலனவர்கள் திருப்பி அனுப்பி வைக்கப்பட்டனர்.
இந்த நிலையில் பாஸ்போர்ட் அலுவலகத்தில் இருந்து 26ம் தேதி வரவும் என திருப்பி அனுப்பி வைக்கபபட்டவர்கள் அனைவருக்கும் குறுஞ்செய்தி சென்று உள்ளது. இதனை தொடர்ந்து 100க்கும் மேற்பட்டவர்கள் தஞ்சையில் உள்ள மண்டல பாஸ்போர்ட் அலுவலகத்திற்கு வந்தனர்.
ஆனால் அலுவலகம் பூட்டப்பட்டு இருந்ததால் அனைவரும் அலுவலகத்தை முற்றுகையிட்டனர்.