புல்லட் வாகனத்தில் அமர்ந்து அருள்பாலித்த முத்துமாரி அம்மன்.

ஆடி வெள்ளியை முன்னிட்டு புல்லட் வாகனத்தில் அமர்ந்து அருள்பாலித்த முத்துமாரி அம்மன்.
ஆடி மாத முதல் வெள்ளிக்கிழமையான இன்று அம்மன் கோயில்களில் சிறப்பு அபிஷேகம் மற்றும் அலங்காரம் செய்து பக்தர்கள் வழிபட்டு வருகின்றனர்.
அதன் தொடர்ச்சியாக தேனி நகரில் உள்ள பிரசித்தி பெற்ற முத்துமாரியம்மன் கோயிலில் மூலவர் அம்மன் மகாலட்சுமி அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.
அதே போன்று உற்சவ அம்மன் சுற்று வித்தியாசமாக புல்லட் இரு சக்கர வாகனத்தில் அமர்ந்து காட்சியளித்தார். புல்லட்டில் ஒய்யாரமாக அமர்ந்துள்ள உற்சவ அம்மனை குழந்தைகள், பெண்கள் மட்டுமின்றி ஆண் பக்தர்களும் ஆச்சரியத்துடன் கண்டு வழிபட்டு செல்கின்றனர்.
CATEGORIES ஆன்மிகம்
TAGS ஆடி வெள்ளிஆன்மிகம்தமிழ்நாடுதலைப்பு செய்திகள்தேனிதேனி மாவட்டம்புல்லட் வாகனத்தில் அமர்ந்து அருள்பாலித்த முத்துமாரி அம்மன்புல்லட் வாகனத்தில் முத்துமாரி அம்மன்முக்கிய செய்திகள்