BREAKING NEWS

பேரணாம்பட்டில் பெங்களுருக்கு கடத்த முயன்ற 20 கிலோ கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது. இது தொடர்பாக வடமாநில வாலிபர்கள் 2 பேரை போலீசார் கைது செய்தனர்.

பேரணாம்பட்டில் பெங்களுருக்கு கடத்த முயன்ற 20 கிலோ கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது. இது தொடர்பாக வடமாநில வாலிபர்கள் 2 பேரை போலீசார் கைது செய்தனர்.

வேலூர் மாவட்டம், குடியாத்தம் மதுவிலக்கு அமலாக்க பிரிவு காவல் ஆய்வாளர் முரளிதரன், உதவி ஆய்வாளர் சிவச்சந்திரன் ஆகியோருக்கு கிடைத்த ரகசிய தகவலின் பேரில் குடியாத்தம் அடுத்த பேரணாம்பட்டு பேருந்து நிலையம் பகுதியில் அதிரடி சோதனை மேற்கொண்டனர்.

 

அப்போது பயணிகள் போல் இரண்டு பேர் கையில் பைகளுடன் சந்தேகத்துக்கு இடமான வகையில் நின்றிருந்தனர். அவர்கள் வைத்திருந்த பைகளை போலீசார் சோதனை செய்தபோது அதில் கஞ்சா பொட்டலங்கள் இருந்தது தெரியவந்தது.

 

இதனையடுத்து போலீசார் அந்த இருவரையும் காவல் நிலையத்திற்கு அழைத்து சென்று விசாரணை மேற்கொண்டனர் விசாரணையில் அவர்கள் ஒடிசா மாநிலம் கலஹண்டி மாவட்டம், ரிஹிதா பகுதியை சேர்ந்த சவுமியாரஞ்சன் சுனா (வயது 28), பாலாங்கிர் மாவட்டம் கமல்லோகா பகுதியை சேர்ந்த பிக்காஷ்பேக் (26) என்பதும், பெங்களூருக்கு கஞ்சாவை கொண்டு செல்வதும் தெரியவந்தது.

 

அதைத்தொடர்ந்து அவர்கள் வைத்திருந்த 20 கிலோ கஞ்சாவை பறிமுதல் செய்து, அவர்கள் மீது வழக்குப் பதிவு செய்து இருவரையும் கைது செய்தனர்.

Share this…

CATEGORIES
TAGS