போடிநாயக்கனூர் நகராட்சியில் தூய்மை இந்தியா திட்டம் மற்றும் திடக்கழிவு மேலாண்மைத் திட்டத்தின்கீழ் விழிப்புணர்வு.

தேனி மாவட்டம் போடிநாயக்கனூர் நகராட்சியில் தூய்மை இந்தியா திட்டம் மற்றும் திடக்கழிவு மேலாண்மைத் திட்டத்தின்கீழ் வீடுகளில் உருவாகும் குப்பைகளை மக்கும் மற்றும் மக்காத குப்பைகள் என தனித்தனியாக பிரித்து கொடுக்க விழிப்புணர்வு ஏற்படுத்தும் விதமாக பரிசு அட்டைத் திட்டம் தொடங்கப்பட்டு செயல்படுத்தப்பட்டு வருகிறது.
அதன் தொடர்ச்சியாக 20வது வார்டு பகுதியிலும் இத்திட்டத்தின்கீழ் வீடுகளுக்கு பரிசு அட்டைகள் வழங்கப்பட்டு ஒரு மாத காலம் மதிப்பீடு செய்யப்பட்டது. இதற்கான பரிசளிப்பு விழா எஸ். எஸ். புரம், சேனைத் தலைவர் மண்டபத்தில் நடைபெற்றது.
விழாவில் நகராட்சி ஆணையர் பொறுப்பு திருமதி செல்வராணி மற்றும் நகர்மன்ற துணைத்தலைவர் திருமதி கிருஷ்ணவேணி மற்றும் 20வது வார்டு நகர்மன்ற உறுப்பினர் மகேஸ்வரன் முன்னிலையில் நகர்மன்ற தலைவர் திருமதி இராஜராஜேஸ்வரி அவர்கள் பரிசுகளை வழங்கினார்.
இத்திட்டத்தில் பங்கேற்ற அனைத்து வீடுகளுக்கும் குப்பைப் பெட்டிகள் வழங்கப்பட்டன. நல்ல முறையில் குப்பைகளை பிரித்து வழங்கிய 20 வீடுகளுக்கு மெடல்கள் மற்றும் பாத்திரங்கள் பரிசாக வழங்கப்பட்டன.
நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை சுகாதார ஆய்வாளர் சுரேஷ்குமார் செய்திருந்தார்.29வது வார்டு நகர்மன்ற உறுப்பினர் சங்கர் அவர்கள் நன்றி கூறினார்.