BREAKING NEWS

மகா சிவராத்திரியை முன்னிட்டு கோவில்பட்டி அருகே அருள்மிகு ஸ்ரீ வீரம்மாள் திருக்கோவிலில் மகா கும்பாபிஷேகம் விழாவில் முன்னாள் அமைச்சர் கோவில்பட்டி சட்டமன்ற உறுப்பினர் கடம்பூர் ராஜூ கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

மகா சிவராத்திரியை முன்னிட்டு கோவில்பட்டி அருகே அருள்மிகு ஸ்ரீ வீரம்மாள் திருக்கோவிலில் மகா கும்பாபிஷேகம் விழாவில் முன்னாள் அமைச்சர் கோவில்பட்டி சட்டமன்ற உறுப்பினர் கடம்பூர் ராஜூ கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

மகா சிவராத்திரியை முன்னிட்டு தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி அருகே தோணுகால் கிராமத்தில் அமைந்துள்ள அருள்மிகு ஸ்ரீ வீரம்மாள் திருக்கோவிலில் மகா கும்பாபிஷேகம் விழா நடைபெற்றது. இதனைத் தொடர்ந்து.திருக்கோயிலில் அதிகாலை 4.00 மணிக்கு திறக்கப்பட்டு விக்னேஸ்வர பூஜை, சண்முக ஜபம் மற்றும் சிறப்பு பூஜைகளும், கணபதி ஹோமம், தன பூஜை, நவக்கிரக பூஜை, கோ பூஜை, யாகசாலை பூஜைகள் உள்ளிட்ட பூஜைகள் நடைபெற்றன.

மேளதாளங்கள் முழங்க யாகசாலையில் இருந்து தீர்த்த குடங்கள் சிறப்பு பூஜை செய்யப்பட்டு, திருக்கோவில் பிரகாரம் வழியாக எடுத்து வந்து கோபுர கலசத்துக்கு புனித நீரால் அபிஷேகம் செய்யப்பட்டது.

இதனைத் தொடர்ந்து மூலஸ்தானத்தில் அம்பாள், சாமிக்கு, 21 அபிஷேக சிறப்பு பூஜைகள், சிறப்பு தீபாராதனை நடைபெற்றது. கும்பாபிஷேக விழாவில் முன்னாள் செய்தி மற்றும் விளம்பரத்துறை அமைச்சர் கோவில்பட்டி சட்டமன்ற உறுப்பினர் கடம்பூர் ராஜூ கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

இதனைத் தொடர்ந்து கோவில்பட்டி அருகே சத்திரப்பட்டி கிராமத்தில் அமைந்துள்ள அருள்மிகு ஸ்ரீ டில்லி பாலாஜி ரேணுகாதேவி அம்மன் திருக்கோவிலில் மகா சிவராத்திரியை முன்னிட்டு சிறப்பு பூஜைகளும், கணபதி ஹோமம், தன பூஜை, நவக்கிரக பூஜை, கோ பூஜை, யாகசாலை பூஜைகள் உள்ளிட்ட பூஜைகள் நடைபெற்றது. மகா சிவராத்திரியில் முன்னாள் அமைச்சர் கோவில்பட்டி சட்டமன்ற உறுப்பினர் கடம்பூர் ராஜூ கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். நிகழ்ச்சியில் மாநில பொதுக்குழு உறுப்பினர் ராமச்சந்திரன், முன்னாள் மாவட்ட ஊராட்சி குழு தலைவி சத்யா, அம்மா பேரவை மாவட்ட இணை செயலாளர் நீலகண்டன், மற்றும் அதிமுக நிர்வாகிகள் பழனி குமார்,கடம்பூர் மாயா துரை, உள்ளிட்ட பலர் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

Share this…

CATEGORIES
TAGS