மக்களின் கோரிக்கையை ஏற்று கிராமங்களுக்கு கூடுதல் பேருந்து இயக்கம் சட்டமன்ற உறுப்பினர் திருமதி. தமிழரசி ரவிக்குமார் அவர்கள் துவக்கி வைத்தார்.

சிவகங்கை மாவட்டம் மானாமதுரையில் அருகே உள்ள முன்று கிராமங்களுக்கு கூடுதலாக போதுமான பேருந்து இல்லாதால் மக்களின் கோரிக்கையை ஏற்று குவளைவேலி மேலநெட்டூர் திருப்பாச்சேத்தி கிராமங்களுக்கு கூடுதல் பேருந்து இயக்கிவைத்தார்.

பொதுமக்களின் நீண்ட நாள் கோரிக்கையை ஏற்று விரைவாக நடவடிக்கை எடுத்து தங்கள் கிராமத்துக்கு பகுதியில் உள்ள மக்களின் தேவைகளுக்காக கூடுதலாக பேருந்து வசதியை ஏற்படுத்திக் கொடுத்த எம்எல்ஏவுக்கு பொதுமக்கள் தங்களது நன்றியை தெரிவித்துக் கொண்டனர்.

இந்த நிகழ்ச்சியில் மாவட்ட துணைச் செயலாளர் சேங்கை மாறன் நகரச் செயலாளர் பொண்ணுச்சாமி ஊராட்சி பெருந்தலைவர் லதா அண்ணாதுரை சிப்காட் காளியப்பன் மற்றும் கட்சி நிர்வாகிகளும் பொதுமக்கள் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.
CATEGORIES சிவகங்கை
